பக்கம் எண் :

862சுந்தர காண்டம்

389.

என்று தன் இதயத்து உன்னி, எறுழ் வலித் தடந்
                              தோள் வீரன்
நின்றனன், நெடியவெற்பின்; நினைப்ப அரும்
                              இலங்கை மூதூர்

ஒன்றிய வடிவம்கண்டு, ஆங்கு, உளத்திடைப்
                        பொறுக்கல் ஆற்றான்;
குன்று உறழ்புயத்து மேலோன் பின்னரும்
                         குறிக்கலுற்றான்.

     எறுழ் - மிக்க. வீரன்- அனுமன், வெற்பு - மகேந்திரமலை   (94-1)

2. ஊர் தேடு படலம்

390. 

‘ஊறு மிகவேஉறினும், யானும் அமர் தேரேன்,
தேறல் இல்அரக்கர் புரி தீமை அது தீர்வுற்று,
ஏறும் வகை எங்குள? இராமனிடை அல்லால்,
மாறும் மதி வேறுபிறிது இல்’ என மதித்தான்.

     கடல் தாவு படலம் 88ஆம்பாடலின் (கம்ப. 4828) மறுபதிப்பு.
                                                      (73-1)

391.

‘கண்டவனப்பான், மேனி கரக்கும் கருமத்தான்,
கொண்டல்செறிப்பான், வானரம் என்றும் கொளல்
                           அன்றே;
அண்டம்அனைத்தும் பூரணன் ஆகும் அவன்
                           ஆகும்;
சண்டைகொடுத்தும் கொள்வன்’ எனத் தான் சலம்
                           உற்றாள்.

     அனுமனை இறைவனாகஇலங்கைமாதேவி கருதுதல். சலம் - கோபம்.
                                                        (86-1)

392.

ஆயவன்அருளால், மீட்டும் அந்தரி அறைந்தாள்,
                                 ‘முன் நாள்
மாய மா நகரம்தன்னை வகுத்து, அயன் என்னும்
                                 மேலாம்