பக்கம் எண் :

மிகைப் பாடல்கள்863

 

தூயவன் என்னைநோக்கி, “சுந்தரி ! காப்பாய்”
                             என்று, ஆங்கு,
ஏயினன், இதற்குநாமம் இலங்கை என்று எவரும்
                             போற்ற.

     அந்தரி -இலங்கைமாதேவி                              (93-1)

393. 

இத் திறம்அனந்த கோடி இராக்கதக் குழுவின்
                          உள்ளார்
தத்தம செய்கைஎல்லாம் தனித் தனி நோக்கி,
                          தாங்காது,
‘எத் திறம்இவர்தம் சீரை எண்ணுவது ?’ எனவே,
                          அண்ணல்
உத்தமன்தேவிதன்னை ஒழிவு அற நாடிப் போனான்.

     இராக்கதரை எண்ணல்அரிது என்ற அனுமன் நினைவு.     (120-1)

394.

கிடந்தனன்,வடவரை கிடந்தபோல்; இரு
தடம் புயம்திசைகளை அளக்கத் தாங்கிய
உடம்பு உறுமுயற்சியின் உறங்கினான், கடை
இடம் பெறுதீவினை யாவும் ஏத்தவே.

     வடவரை - மேருமலை.                                (123-1)

395.

குடம் தரும்செவிகளும், குன்றம் நாணுறத்
தடந் தருகரங்களும், தாளும், தாங்குறாக்
கிடந்தது ஓர்இருள் எனக் கிடந்துளான்தனை
அடைந்தனன்,அஞ்சுறாது-அனுமன் ஆண்மையான்.

     கும்பகர்ணனைக் கிடந்தஇருள் என்றார்.                (130-1)

3. காட்சிப்படலம்

396.

எயிலின்உட்படு நகரின் யோசனை எழு-நூறும்
அயிலினின் படர்இலங்கை மற்று அடங்கலும்
                          அணுகி,
மயல் அறத் தனிதேடிய மாருதி, வனசக்
குயில் இருந்தஅச் சோலை கண்டு, இதயத்தில்
                          குறித்தான்.