பக்கம் எண் :

864சுந்தர காண்டம்

எயில் - மதில்.மயல் - மயக்கம். வனசக் குயில் - தாமரைக் குயில்
சீதையைக் குறித்தது.                                        (1-1)

397.

அஞ்சனத்துஒளிர் அமலனை மாயையின் அகற்றி,
வஞ்சகத்தொழில் இராவணன் வவ்வினன்
                                கொடுவந்து,
இஞ்சி உட்படும்இலங்கையின் சிறையில் வைத்திட,
                                ஓர்
தஞ்சம் மற்றுஇலை; தான் ஒரு தனி இருந்து
                               அயர்வாள்.

     இஞ்சி- மதில். தஞ்சம் - ஆதரவு.                      (2-1)

398.

கண்ணின்நீர்ப் பெருந் தாரைகள் முலைத் தடம்
                          கடந்து
மண்ணின்மீதிடைப் புனல் என வழிந்து அவை ஓட,
விண்ணைநோக்குறும்; இரு கரம் குவிக்கும்; வெய்து
                         உயிர்க்கும்;
எண்ணும் மாறுஇலாப் பிணியினால் இவை இவை
                         இயம்பும்

    சீதையின் அவலம்கூறப்பெறுகிறது.                       (10-1)

399. 

‘மாய மானின்பின் தொடர்ந்த நாள், “மாண்டனன்”
                           என்று
வாயினால் எடுத்துஉரைத்தது வாய்மை கொள்
                           இளையோன்
போய், அவன்செயல் கண்டு, உடல் பொன்றினன்
                           ஆகும்;
ஆயது இன்னது என்றுஅறிந்திலேன்’ என்று என்றும்
                           அயர்வாள்.

     மாயமானின் பின்போய் இருவரும் இறந்தனரோ என்ற ஐயம் சீதைக்கு
எழுகிறது.                                               (16-1)

400.

இன்னஎண்ணி, இடர் உறுவாள் மருங்கு,
உன் ஓர் ஆயிரகோடி அரக்கியர்