| துன்னு காவலுள், தூய திரிசடை என்னும் மங்கைதுணைஇன்றி, வேறுஇலாள். |
உன் - நினைக்கப்படும். (29-1) 401. | தரும நீதிதழுவிய சிந்தை கொண்டு உரிய வீடணன்தந்தருள் ஒண்டொடி, திரிசடைக்கொடி, நாள்தொறும் தேற்று சொல் அருளினால், தனதுஆவி பெற்று உய்ந்துளாள். |
வீடணன் மகள் திரிசடைதேற்றப்பிராட்டி உய்ந்தாள். (29-2) 402. | அன்னள் ஆயஅருந்ததிக் கற்பினாள் மன்னு சோலையில்மாருதியும் வர, தன் இடம் துடித்துஎய்துற, சானகி என்னும் மங்கை,இனிது இருந்தாள் அரோ. |
அனுமன்வர சானகிக்குஇடம்துடித்தது. (29-3) 403. | ‘தாட்சிஇன்று’ என, திரிசடையும், ‘சாலவும் மாட்சியின்அமைந்தது, மலர் உளாள் தொழும் காட்சியாய் !இக் குறி கருதும் காலையில், ஆட்சியே கடன்என அறிந்து நல்குவாய். |
மலர் உளாள் -இலக்குமி. இக்குறி - நிமித்தம். (32-1) 404. | மீட்டும்,அத் திரிசடை என்னும் மென் சொலாள், ‘தோள் தடம்பொரு குழைத் தொண்டைத் தூய்மொழி கேட்டி; வெங் கடுஎனாக் கிளர் உற்பாதம்ஆய், நாட்டினை;யாவரும் நடுக்கம் காண்டுமால். |
தொண்டை -தொண்டைக்கனி போன்ற வாய். கடு - விடம். உற்பாதம் -துர்நிமித்தம். (53-1) 405. | சிரம் ஒருமூன்றினார்; திருக்கு மூன்றினார்; கரம் ஒருமூன்றினார்; காலும் மூன்றினார்; |
|