பக்கம் எண் :

894சுந்தர காண்டம்

 

ஒன்றும் நீஉணரலை; உறுதி வேண்டுமேல்,
சென்று,அவன்தனைச் சரண் சேர்தி, மீண்டு’
                             என்றான்.

     அங்கதன்  இளவரசன்ஆகவே அவனையே சரணமாக அடை என்று
ததிமுகனுக்குச் சுக்ரீவன் கூறுதல்.                            (19-13)

514.

என்ற அத்ததிமுகன் தன்னை, ஏனைய
வன் திறல் அரசுஇளங் குரிசில் மைந்தனைப்
பின்றுதல் அவனைஎன் பேசற் பாற்று நீ;
இன்று போய்,அவன் அடி ஏத்துவாய்’ என்றான்.

     இதுவும்அது.                                     (19-14)

515.

வணங்கியசென்னியன்; மறைத்த வாயினன்;
உணங்கியசிந்தையன்; ஒடுங்கும் மேனியன்;
கணங்களோடு ஏகி,அக் கானம் நண்ணினான்-
மணம் கிளர்தாரினான் மறித்தும் வந்துஅரோ.

     மீண்டும் ததிமுகன்மதுவனம் வருதல்.                (19-15)

516.

கண்டனன்வாலி சேய்; கறுவு கைம்மிக,
‘விண்டவன், நம்எதிர் மீண்டுளான்எனின்,
உண்டிடுகுதும்உயிர்’ என்ன, உன்னினான்;
‘தொண்டு’ என,ததிமுகன், தொழுது தோன்றினான்.

     அங்கதன் கோபிக்கவும்ததிமுகன் அவன் அடி பணிதலும். (19-16)

517.

‘போழ்ந்தனயான் செய்த குறை பொறுக்க !’ எனா,
வீழ்ந்தனன்அடிமிசை; வீழ, வாலி சேய்,
தாழ்ந்து, கைப்பற்றி, மெய் தழீஇக்கொண்டு,
                            ‘உம்மை யான்
சூழ்ந்ததும்பொறுக்க !’ எனா, முகமன் சொல்லினான்.

     ததிமுகனும் அங்கதனும்ஒருவர்க்கொருவர் மன்னி்ப்புக் கேட்டு
சமாதானம் அடைதல்.                                     (19-17)