518. | ‘யாம் முதல் குறித்த நாள் இறத்தல் எண்ணியே ஏமுற, துயர்துடைத்து, அளித்த ஏற்றம்போல், தாமரைக்கண்ணவன் துயரம் தள்ள, நீர் போம்’ என,தொழுது, முன் அனுமன் போயினான். |
அனுமனை முன்னர்இராமனிடம் அனுப்பல். (19-18) 519. | ‘வன் திறல்குரிசிலும் முனிவு மாறினான்; வென்று கொள்கதிரும் தன் வெம்மை ஆறினான்’ என்றுகொண்டு,யாவரும், ‘எழுந்து போதலே நன்று’ என,ஏகினார், நவைக்கண் நீங்கினார். |
அனைவரும் மாலையில்மதுவனத்திருந்து புறப்படுதல். (19-19) 520. | இப்புறத்துஇராமனும், இரவி சேயினை ஒப்புற நோக்கி,‘வந்துற்ற தானையர்; தப்பு அறக்கண்டனம் என்பரோ ? தகாது அப்புறத்துஎன்பரோ ? அறைதியால் !’ என்றான். |
இராமன் சுக்ரீவனைப்பார்த்து வினாவுதல். இதுவரை மதுவன நிகழ்ச்சிக்குப் பின் நடந்தவை கூறப்பெற்றன. (19-20) 521. | வனை கருங்குழலியைப் பிரிந்த மாத் துயர் அனகனுக்கு அவள்எதிர் அணைந்ததாம் எனும் மன நிலை எழுந்தபேர் உவகை மாட்சி கண்டு, அனுமனும்அண்ணலுக்கு அறியக் கூறுவான்; |
இராமன் மகிழ்ச்சியும்அனுமன் கூற்றும். (23-1) 522. | மாண்பிறந்து அமைந்த கற்பின் வாணுதல் நின்பால் வைத்த சேண் பிறந்துஅமைந்த காதல், கண்களின் தெவிட்டி, தீராக் காண்பிறந்தமையால், நீயே, கண் அகன் ஞாலம் தன்னுள், ஆண் பிறந்துஅமைந்த செல்வம் உண்டனையாதி அன்றோ ? |
|