பக்கம் எண் :

மிகைப் பாடல்கள்897

526.

என்று உரைத்து எழுந்த வேலை, மாருதி இரு கை
                                    கூப்பி,
‘புன் தொழில்குரங்கு எனாது என் தோளிடைப்
                              புகுது’ என்னா,
தன் தலை படியில்தாழ்ந்தான்; அண்ணலும், சரணம்
                             வைத்தான்;
வன் திறல் வாலிசேயும் இளவலை வணங்கிச்
                             சொன்னான்;

     இராமன் அனுமன் மேல்வீற்றிருத்தல்.                  (49-2)

527.

‘நீ இனிஎன்தன் தோள்மேல் ஏறுதி, நிமல !’ என்ன,
வாய் புதைத்து இறைஞ்சி நின்ற வாலி காதலனை
                                    நோக்கி,
நாயகற்கு இளையகோவும். ‘நன்று’ என அவன்தன்
                                 தோள்மேல்,
பாய்தலும், தகைப்பு இல் தானை படர் நெறிப் பரந்தது
                                 அன்றே.

     இலக்குவன்அங்கதன் தோள் மேல் ஏறுதல்.       (49-3)

528.

கருடனில் விடையில் தோன்றும் இருவரும் கடுப்ப,
                           காலின்
அருள் தரு குமரன்தோள்மேல், அங்கதன் அலங்கல்
                           தோள்மேல்,
பொருள் தரும் வீரர் போத, பொங்கு ஒளி விசும்பில்
                           தங்கும்
தெருள் தகு புலவர்வாழ்த்திச் சிந்தினர், தெய்வப்
                           பொற் பூ.

     திருமாலும்,சிவபெருமானும் போல இராமலக்குவர்; கருடனும், விடையும்
போல அனும அங்கதர் தோள் மேல் ஏறிப் புறப்படுதல்.          (49-4)

529.

‘வையகம் அதனில் மாக்கள் மயங்குவர்,வய வெஞ்
                          சேனை
எய்திடின்’என்பது உன்னி, இராகவன் இனிதின் ஏவ,