பக்கம் எண் :

 இராவணன் மந்திரப் படலம் 25

பார்க்காதவர்களாய்;  இறந்தவர் - போரிட்டு முடிந்தவர்கள்;எண்ணில்
ஆவரோ?
- இத்தனை பேர் என எண்ண முடிந்தவரோ?
 

'கண்'  என்பதைக்  கண்ணோட்டம் எனக் கொண்டு,  மண்ணிலும்,
விண்ணிலும்   மற்றும்  முற்றும் வாழ்பவர் உனது கண்ணோட்டத்தால்
வாழ்பவரே  எனவும்  பொருள் கூறலாம். எண்ணல்- மதித்தல். வலம்-
வலிமை.
 

(26)
 

6097.

'இடுக்கு இவண் இயம்புவது இல்லை; ஈண்டு எனை
விடுக்குவையாம் எனின், குரங்கை வேர்அறுத்து,
ஒடுக்க அரு மனிதரை உயிர் உண்டு, உன் பகை
முடிக்குவென் யான்' என முடியக் கூறினான்.
 

இடுக்கு   இவண் இயம்புவதில்லை - இங்கே சொல்லத்  தகுந்த
துன்பம் எதுவும்  இல்லை;  ஈண்டு  எனை விடுக்குவை யாம் எனின்
- இப்போது என்னைப்  போருக்குச்   செல்ல விடுவாயானால்; குரங்கை
வேர் அறுத்து 
-  குரங்கினத்தையே   வேருடன்  அழித்து; ஒடுக்கரு
மனிதரை உயிர் உண்டு
-  அடக்குவதற்கரிய   அம்மானிடரை  உயிர்
குடித்து; உன்  பகை முடிக்குவன்  யான்  என -  உனது  பகையை
முடிப்பேன் யானே;என முடியக் கூறினான் -  என்று   முடிவாகக் கூற
வேண்டியவற்றைக் கூறினான்.
 

இடுக்கு - துன்பம்  ஒடுக்க  அரும் - அடக்க  அரிய  மனிதர். இராம,
இலக்குவர். ஈண்டு-இப்போது.
 

(27)
 

வச்சிரதந்தன் பேச்சு
 

6098.

இச் சிரத்தவன் உரைத்து இறுக்கும் ஏல்வையின்,
வச்சிரத்துஎயிற்றவன் வல்லை கூறினான்.
அச் சிரத்தைக்கு ஒரு பொருள் இன்று, ஆயினும்,
பச்சிரத்தம் பொழி பருதிக் கண்ணினான்.
 

இச்சிரத்தவன் -  இந்தத்   தலைமை  பொருந்திய மகோதரன்;
உரைத்து இறுக்கும்  ஏல்வையின் 
-  இவ்வாறு   கூறி  முடிக்கும்
சமயத்திலே;பச்சிரத்தம்   பொழி  - பச்சை  இரத்தம் பொழிகின்ற;
பருதி   கண்ணினான் 
-    சூரியனைப்  போன்ற     கண்களை
உடையவனாகிய;வச்சிரத்து எயிற்றவன் -  வச்சிரதந்தன்  என்பவன்;
அச்சிரத்தைக்கு
- அவன் கூறும் அந்த உறுதி