பக்கம் எண் :

26யுத்த காண்டம் 

மொழிகளுக்கு;  ஒரு பொருள் இன்று ஆயிலும் - ஒரு பயனும்
இல்லை    என்றாலும்;   வல்லை    கூறினான் -   விரைந்து
கூறுவானானான்.
 

சிரத்தவன் - தலைமை வாய்ந்தவன்  என்றது   மகோதரன்.
ஏல்வை-சமயம். சிரத்தை-உறுதி   இங்கு   உறுதி   மொழியை
உணர்த்தும்.   பச்சைரத்தம் - பச்சிரத்தம்   எனத்   திரிந்தது.
வச்சிரம்  போன்ற   பற்களை     உடையவன்    என்பதால்
வச்சிரதந்தன் எனப்பட்டான்.
 

(28)
 

6099.

' "போய் இனி, மனிசரைக் குரங்கைப் பூமியில்
தேயுமின், கைகளால்; தின்மின்" என்று எமை
ஏயினை இருக்குவது அன்றி, என், இனி
ஆயும் இது? எம்வயின் அயிர்ப்பு உண்டாம்கொலோ?
 

இனி, போய் - இனிச் சென்று;மனிசரை, குரங்கை - அந்த
மனிதர்களையும், குரங்குகளையும்;பூமியில் கைகளால் தேயுமின்
- நிலத்தோடு  சேர்த்து கைகளால்   தேய்த்துக்  கொல்லுங்கள்;
தின் மின்   - அவர் உடல்களைத்   தின்னுங்கள்;   என்று -
என்றுகூறி; எமை ஏயினை இருக்குவதன்றி -   எங்களை ஏவி
விட்டு,  வாளா இருப்பதல்லாது;என் இனி ஆயும் இது- என்ன
ஆராய்ச்சி  வேண்டியுள்ளது? எம் வயின்   -  எங்கள் மேல்;
அயிர்ப்பு  உண்டாம்   கொலோ 
-   ஏதேனும்  சந்தேகம்
உண்டோ?
 

போயினி என்பதை இனிப் போய் என இயைக்க. இப்போதே
ஏயினை-ஏவி முற்றெச்சம். இருக்குவது - இருப்பது   இனி-இனி
மேலாவது என்பதும் பொருந்தும்.
 

(29)
 

6100.

'எவ் உலகத்தும் நின் ஏவல் கேட்கிலாத்
தெவ்வினை அறுத்து, உனக்கு அடிமை செய்த யான்
தவ்வின பணி உளது ஆகத்தான்கொலோ.
இவ் வினை என்வயின் ஈகலாது?' என்றான்.
  

எவ்வுலகத்தும் - எந்த உலகத்தில் வாழ்பவராயினும்; நின்
ஏவல் கேட்கிலா
- உனது கட்டளைப்படி கேட்டு    நடவாத;
தெவ்வினை அறுத்து - பகைவர்களை  அடியோடு  அழித்து;
உனக்கு  அடிமை   செய்த   யான்   -  இது வரை உனது
அடியவனாகப் பணி செய்த  நான்;  தவ்வின  பணி   உளது
ஆகத்தான்     கொலோ 
-      தவறி     விட்ட   பணி
இருப்பதென்பதாலோ; இவ்வினை - இந்தப்