மனிதர்களும் குரங்குகளுமே; வலியர் ஆம் எனின் - வலிமை உடையவர்கள் என்றால்; இராவணனுக்கு அமைந்த ஆற்றல்- இலங்காதிபனான இராவணனுக்கு அமைந்த வலிமை; அக்கட- ஆச்சரியப்படத்தக்க தொன்றே. |
திக்கு + கயம் - திக்கயம். முரண் - வலிமை. 'அக்கட' என்பது அதிசயம் என்ற பொருள் கொண்ட திசைச்சொல் தெலுங்குச் சொல் என்பர். |
(32) |
6103. | 'பொலிவது, பொதுவுற எண்ணும் புன் தொழில் |
| மெலியவர் கடன்; நமக்கு இறுதி வேண்டுவோர் |
| வலியினர்எனில், அவர்க்கு ஒதுங்கி வாழ்துமோ- |
| ஒலி கழல் ஒருவ !-நம் உயிருக்கு அன்பினால்? |
|
ஒலிகழல் ஒருவ - ஒலிக்கின்ற கழல் பூண்ட ஒப்பற்ற தலைவனே; பெலிவறு - எதிர்காலத்தில் நிகழப்போகும் காரியங்களை; பொது உற - நடுவு நிலை பொருந்த; என்னும் புண்தொழில்-ஆராயும் இழிந்த செயல்; மெலியவர் கடன் - வலிமையில்லாதவர்களின் கடமையாகும்; நமக்கு இறுதி வேண்டுவோர் - நம் முடிவை விரும்பும் பகைவர்; வலியினர் எனின் - வலிமை உடையவர் என்றால்; நம் உயிருக்கு அன்பினால் - நமது உயிர்மேல் வைத்த அன்பினால்; அவர்க்கு ஒதுங்கி வாழ்துமோ - அவர்களுக்கு எதிர்படாமல் ஒதுங்கி வாழ்வோமோ? |
ஒருவன்-ஒப்பற்றவன் (இராவணன்) பொலிவது-எதிர்கால நிகழ்ச்சி. பொது உற-நடு நிலை பொருந்த. |
(33) |
6104. | 'கண்ணிய மந்திரக் கருமம் காவல!- |
| மண் இயல் மனிசரும், குரங்கும், மற்றவும், |
| உண்ணிய அமைந்தன; உணவுக்கு உட்குமேல், |
| திண்ணிய அரக்கரின் தீரர் யாவரே? |
|
காவல- அசுரர் குல காவலனே! கண்ணிய மந்திரக் கருமம் - நாம் கருதிய மந்திராலோசனை ஆகிய காரியம்; மண்ணியல் மனிசரும ் - நிலத்திலே நடந்து திரியும் இயல்புடைய மனிதர்களும்; குரங்கும் - குரங்குகளும்; மற்றவும் - பிறவற்றையும் பற்றியதாகும்; உண்ணிய அமைந்த - அவையெல்லாம் நாம் தின்பதற்கு அமைந்தவையாகும்; உணவுக்கு உட்குமேல்- உணவுப்பொருளுக்கு |