நாம் பயந்தோம் என்றால்;திண்ணிய அரக்கரில் - வலிமை மிக்க அரக்கராகிய நம்மைவிட; தீரர் யாவரே - வீரர்கள் யாருள்ளார்? |
கண்ணுதல்-கருதுதல். உட்குதல்-அஞ்சுதல் அரக்கர்களில் தீரர் யாவரே என்றது இகழ்ச்சி குறிப்பாம். |
(34) |
6105.் | 'எரி உற மடுப்பதும், எதிர்ந்துளோர் படப் |
| பொரு தொழில் யாவையும் புரிந்து, போவதும் |
| வருவதும், குரங்கு; நம் வாழ்க்கை ஊர் கடந்து, |
| அரிதுகொல், இராக்கதர்க்கு ஆழி நீந்துதல்? |
|
வருவதும்- நாம் வாழும் ஊராகிய இலங்கை மாநகருக்கு வருவதும்; எரி உற மடுப்பதும் - ஊருக்குத் தீ இடுவதும்; எதிர்ந்துளோர் பட - எதிர்த்தவர் இறக்கும்படி; பொருதொழில் - போர் புரியும் தொழில்கள்; யாவையும் புரிந்து - எல்லாவற்றையும் செய்து; போவதும் - ஊரைக் கடந்து தப்பிப் போவதும்; குரங்கு - ஒரு குரங்கு செய்யும் செயலாயிற்று; கடந்து நம் வாழ்க்கை ஊர் - நாம் வாழும் ஊரைக்கடந்து; இராக்கதர்க்கு - அரக்கர்களாகிய நமக்கு; ஆழி நீந்துதல் - கடலை நீந்திக் கடப்பதென்பது; அரிது கொல்- செய்ய இயலாத அரிய செயலோ? |
(35) |
6106. | 'வந்து, நம் இருக்கையும், அரணும், வன்மையும், |
| வெந் தொழில் தானையின் விரிவும், வீரமும், |
| சிந்தையின் உணர்பவர் யாவரே சிலர், |
| உய்ந்து தம் உயிர்கொடு இவ் உலகத்துள் உளார்? |
|
வந்து நம் இருக்கையும் - இலங்கைக்கு வந்து நாம் வாழும் நமது இருப்பிடங்களையும்; அரணும் - இலங்கைக்குப் பாதுகாப்பான அரண்களையும்; வன்மையும்- நமது வலிமையையும்; வெந்தொழில் - கொடிய போர்த்தொழில் வல்ல; தானையின் விரிவும் - சேனையின் பாப்பையும்; வீரமும் - அதன் ஆற்றலையும்; சிந்தையின் உணர்பவர் - மனத்தினால் அறிய வல்லவர்கள்; உய்ந்து தம் உயிர் கொடு - நம்மிடம் பகைத்து பிழைத்து உயிருடன் சென்றவர்கள்; இவ்வுலகத்துள் உளார் - இவ்வுலகத்திலே இருப்பவர்கள்; யாவரே சிலர் - சிலரேனும் யார் இருக்கிறார்கள்? |