வந்து - இலங்கைக்கு வந்து. இருக்கை - இருப்பிடம் வெம்தொழில்- கொடிய
போர்த்தொழில். கொண்டு என்பது கொடு என விகாரமாயிற்று. |
(36) |
6107. |
'ஒல்வது நினையினும், உறுதி ஓரினும், |
|
வெல்வது விரும்பினும், வினையம் வேண்டினும், |
|
செல்வது அங்கு; அவருழைச் சென்று, தீர்ந்து அறக் |
|
கொல்வது கருமம்' என்று உணரக் கூறினான். |
|
|
ஒல்வது நினையினும் - பொருந்தும் விதத்தை நினைத்துப் பார்த்தாலும்;
உறுதி ஓரினும் - நமக்கு உறுதி பயப்பனவற்றை ஆராயினும்;
வெல்வது விரும்பினும் - நாம் வெற்றியடைய விரும்பினாலும்;
வினையம் வேண்டிலும் - அந்த வெற்றிக்குரிய வினையத்தை வேண்டினாலும்;
செல்வது அங்கு - செல்ல வேண்டியது அங்கேதான்; அவர் உழை
சென்று - அந்தப் பகைவர் இருக்குமிடம் சென்று; தீர்ந்து
அறக் கொல்வது கருமம் - அவர்கள் இறந்து அழியும்படி கொல்வதே
செய்யவேண்டிய செயலாகும்; என்று உணரக் கூறினான் - என்று
இராவணன் உணரும்படி கூறினான். |
ஒல்வது-பொருந்துவது. உறுதி-நன்மை. வினையம்-சூழ்ச்சித்திறம்.
கருமம்-செய்யத்தக்க காரியம். |
(37) |
மகா பார்சுவன் கூற்று |
6108. |
காவலன் கண்
எதிர், அவனைக் கை கவித்து, |
|
'யாவது உண்டு, இனி நமக்கு?' என்னச் |
|
சொல்லினான்; |
|
'கோவமும்
வன்மையும் குரங்குக்கே' எனா,- |
|
மாபெரும்பக்கன் என்று ஒருவன் வன்மையான். |
|
|
மாபெரும் பக்கன் என்று ஒருவன்- மகா பார்சுவன் என்னும் பெயர்
கொண்ட ஒருவன்; வன்மையான் - ஒப்பற்ற வலிமை மிக்கவன்;
காவலன் கண் எதிர் - அரசனான இராவணன் கண் எதிரிலேயே; அவனை கை
கவித்து - துன்முகனை நீ கூறியது போதுமெனக் கை கவித்து; யாவது
உண்டு இனி நமக்கு- (ஒரு குரங்கு செய்த காரியத்துக்கு
வருந்தி ஆலோசனை செய்வதென்றால்) இனி நமக்கு என்ன பெருமை இருக்கும்?
கோவமும் வன்மையும் குரங்குக்கே- கோவமும் வலிமையும் |