கொச்சகக் கலிப்பா |
7623. | சிந்துரச் செம் பசுங் குருதி திசைகள்தொறும் திரை |
| ஆறா, |
| எந்திரத் தேர், கரி, பரி, ஆள், ஈர்த்து ஓடப் |
| பார்த்திருந்த |
| கந்தரப் பொன்-கிரி ஆண்மைக் களிறு அனையான், |
| கண் நின்ற |
| சுந்தரப் பொன்-தோளானை முகம் நோக்கி, இவை |
| சொன்னான்; |
|
சிந்துரச் செம் பசுங்குருதி- சிந்துரப் பொடி போன்ற புதிய பசிய குருதி; திசைகள் தொறும் திரை ஆறா- திசைகள் தோறும் அலைகளை உடைய ஆறாக ஓடி; எந்திரத் தேர் கரி பரி ஆள்- பொறிகள் அமைந்த தேர்களையும் யானைகளையும், குதிரைகளையும் வீரர்களையும்; ஈர்த்து ஓடப் பார்த்திருந்த - இழுத்துக் கொண்டு செல்வதைப் பார்த்துக் கொண்டு இருந்த; கந்தரம் பொன்கிரி - தலையை உடைய பொன்கிரியையும்; ஆண்மைக் களிறு அனையான்- வீரம் பொருந்திய களிற்றையும் ஒத்தவனான கும்பகருணன்; கண் நின்ற- தன் கண் எதிரில் நின்ற; சுந்தரப் பொன் தோளானை- மிக அழகிய தோளினை உடைய இராமனது; முகம் நோக்கி இவை சொன்னான் - முகத்தைப் பார்த்து இச்சொற்களைக் கூறினான். |
(352) |
7624. | 'புக்கு அடைந்த புறவு ஒன்றின் பொருட்டாகத் துலை |
| புக்க |
| மைக் கடங் கார் மத யானை வாள் வேந்தன் வழி |
| வந்தீர்! |
| இக் கடன்கள் உடையீர்! நீர் எம் வினை தீர்த்து, |
| உம்முடைய |
| கைக்கு அடைந்தான் உயிர் காக்கக் கடவீர், என் |
| கடைக்கூட்டால். |
|
புக்கு அடைந்த புறவு ஒன்றின் பொருட்டாக- தன்னைச் சரணாகதி அடைந்த புறா ஒன்றின் பொருட்டாக; துலை புக்க- தராசுத் தட்டில் ஏறிய; மைக்கடங்கார் மதயானை வாள் வேந்தன் வழிவந்தீர்- கருமையான மதநீரை மேகம் போல் பொழிகின்ற |