7626. | 'வெல்லுமா நினைக்கின்ற வேல் அரக்கன், |
| வேரோடும் |
| கல்லுமா முயல்கின்றான், இவன்" என்னும் |
| கறுவுடையான்; |
| ஒல்லுமாறு இயலுமேல், உடன்பிறப்பின் பயன் ஓரான்; |
| கொல்லுமால், அவன் இவனை; குறிக்கோடி, |
| கோடாதாய்! |
|
கோடாதாய்- நீதிநெறி தவறாதவனே; வெல்லுமா நினைக்கின்ற வேல் அரக்கன் - வெல்லுமாறு எண்ணுகின்ற வேல் படையை உடையவனாகிய இராவணன்; இவன் வேரோடும் கல்லுமா முயல்கின்றான் என்னும் - இவ்வீடணன் தன்னை அடியோடு அழிக்க முயல்கின்றான் என்னும்; கறுவுடையான் - உள்ளடங்கிய வஞ்சம் உடையான்; ஒல்லுமாறு இயலுமேல் - வாய்ப்பு நேருமானால்; அவன் இவனை- அந்த இராவணன் இந்த வீடணனை; உடன் பிறப்பின் பயன் ஓரான் கொல்லுமால் - உடன் பிறப்புப் பாசத்தின் பயனை உணராதவனாய்க் கொல்லுவான்; குறிக்கோடி- இதனை மனதில் கொள். |
உடன்பிறப்பின் பயன் ஓரான் என்ற தொடர் கும்பகருணன் உடன்பிறப்பின் தன்மையை உணர்ந்தவன் என்பதைக் காட்டுகிறது. இப்பிறவியில் உடன்பிறந்தவர் அடுத்த பிறவியில் உடன்பிறந்தவர் ஆகப் பிறக்க வேண்டிய நியதியில்லை ஆகையால் இவ்வாறு குறிப்பிட்டான் என்க. கல்லுதல் - அழித்தல். கறு - உள்ளடக்கிய வஞ்சம். செயிர்ப்பு என்றார் பிறரும். ஒல்லுமாறு இயலுமேல்-வாய்ப்பு நேருமானால். |
(355) |
7627. | 'தம்பி என நினைந்து, இரங்கித் தவிரான், அத் |
| தகவு இல்லான்; |
| நம்பி! இவன்தனைக் காணின் கொல்லும்; இறை |
| நல்கானால்; |
| உம்பியைத்தான், உன்னைத்தான், அனுமனைத்தான், |
| ஒரு பொழுதும் |
| எம்பி பிரியானாக அருளுதி; யான் வேண்டினேன். |
|
நம்பி- ஆடவரில் சிறந்தவனே!; அத்தகவு இல்லான்- அந்த நற்குணமில்லாதவனாகிய இராவணன்; தம்பி என நினைந்து இரங்கித் தவிரான்- வீடணன் தம்பி ஆயிற்றே என்று எண்ணி இரக்கம் கொண்டு உயிரோடு விட்டிடான்; இவன்தனைக் காணின் |