பக்கம் எண் :

980யுத்த காண்டம் 

தம்பியின்   உயிருக்காக  வேண்டியவன்  தன்  மானத்துக்காக
இதனை வேண்டுகிறான். எதிர்மறைத் தொழிற்பெயர்.
 

(357)
 

7629.

'வரம் கொண்டான்; இனி மறுத்தல் வழக்கு அன்று'

என்று, ஒரு வாளி

உரம் கொண்ட தடஞ் சிலையின் உயர் நெடு நாண்

உள் கொளுவா,

சிரம் கொண்டான்; கொண்டதனைத் திண் காற்றின்

கடும் படையால்,

அரம் கொண்ட கருங் கடலின் அழுவத்துள்

அழுத்தினான்.

 

வரம்  கொண்டான் -   கும்பகருணன்   வரமாகக்  கேட்டுக்
கொண்டான்; இனி மறுத்தல் வழக்கு அன்று- ஆகையால்  இனி
மறுத்தல்   முறைமையன்று;    என்று  ஒருவாளி- என்று  கருதி
ஓரம்பினை; உரம் கொண்ட தடஞ்சிலையின்  உயர்  நெடுநாண்
உல்  கொளுவா
- வலிமை  கொண்ட  பெரிய  வில்லின்   சிறந்த
நெடிய நாணைப் பூட்டி உள்ளே  வைத்து; சிரம்   கொண்டான்-
எய்து  கும்பகருணனது  தலையை  அறுத்தான்;   கொண்டதனை-
அறுத்த  அந்தத்  தலையை;  திண்  காற்றின் கடும் படையால்-
வலிய காற்றின் கடிய அம்பினால்; அரம் கொண்ட கருங்கடலின
அழுவத்துள்  அழுத்தினான்
- ஒலி  கொண்ட  கரிய   கடலின்
நடுவில் உள்ளே விழச் செய்தான்.
 

(358)
 

கும்பகருணன் தலை கடலில் மூழ்குதல்
 

7630.

மாக் கூடு படர் வேலை மறி மகரத் திரை வாங்கி,
மேக்கூடு, கிழக்கூடு, மிக்கு இரண்டு திக்கூடு,
போக்கூடு கவித்து, இரு கண் செவியூடும் புகை

உயிர்க்கும்

மூக்கூடும் புகப் புக்கு மூழ்கியது, அம் முகக்

குன்றம்.

 

மாக்கூடு படர்வேலை- கருமை நிறம் மிகக் கூடியுள்ள பரந்த
கடலில்; மறி  மகரத்திரை  வாங்கி- மடங்குகின்ற  அலைகளை
அப்பால் தள்ளி; மேக்கூடு, கிழக்கூடு மிக்கு இரண்டு  திக்கூடு
- மேற்கிலும், கிழக்கிலும் மிக்குள்ள இரண்டு திசைகளிலும்;