பக்கம் எண் :

 கும்பகருணன் வதைப் படலம் 981

போக்கூடு  கவித்து - இடையே  போதல்  தவிர்த்து;  இருகண்
செவியூடும்
- இரு கண்களிலும்;  புகை   உயிர்க்கும்- புகையை
வெளிப்படுத்தும்;   அம்முகக்   குன்றம் - அந்த    முகமாகிய
சிறுமலை;   மூக்கூடும்    புகப்   புக்கு   மூழ்கியது- மூக்கு
வழியாகவும் நீர் உள்புகுதலால் மூழ்கியது.
 

கடலில் மலை போன்ற முகம் விழவே கடல்   நீர்  முதலில்
நான்கு   பக்கங்களிலும்   விலகியது.   அந்த  முகம் அறுபட்ட
மூக்கின் வழி கடல் நீர் புகுந்ததால் மூழ்கி விட்டது.
 

(359)
 

7631.

ஆடினார் வானவர்கள்; அரமகளிர் அமுத இசை
பாடினார்; மா தவரும் வேதியரும் பயம் தீர்ந்தார்;
கூடினார் படைத்தலைவர், கொற்றவனை; குடர்

கலங்கி

ஓடினார், அடல் அரக்கர், இராவணனுக்கு

உணர்த்துவான்.

 

வானவர்கள் ஆடினார்- வானவர்கள் ஆடினார்; அரமகளிர்
அமுத  இசை பாடினார்
- தேவமகளிர் அமுதம் போன்ற இசைப்
பாடலைப் பாடினார்; மாதவரும் வேதியரும்  பயம் தீர்ந்தார்-
தவமுனிவர்களும்    அந்தணர்களும்   அச்சம்    நீங்கினார்கள்; 
கொற்றவனைப் படைத்தலைவர் கூடினார்- வானரப்   படைத்
தலைவர் வெற்றி பெற்ற இராமனைக்  கூடினார்; அடல் அரக்கர்
குடர் கலங்கி
- கொல்லும்  தன்மையுள்ள  அரக்கர்கள்   குடர்
கலங்கி;     இராவணனுக்கு   உணர்த்துவான்   ஓடினார் -
இராவணனுக்கு உணர்த்துவதற்காக ஓடினார்கள்.
 

வானவர்  ஆட,  அரமகளிர்  பாட,  மாதவரும்  வேதியரும்
பயம் தீர, படைத்தலைவர் கொற்றவனைக் கூட, அடல்  அரக்கர்
குடர் கலங்கி இராவணனுக்கு உணர்த்துவான் ஓடக் கும்பகருணன்
இறந்தனன் என்க.
 

(360)