பக்கம் எண் :

982யுத்த காண்டம் 

மிகைப் பாடல்கள்
 
1. கடல் காண் படலம்
 
530.மூன்றரைக் கோடியின் உகத்து ஓர் மூர்த்தியாய்த்
தான் திகழ் தசமுகத்து அவுணன், சாலவும்
ஆன்ற தன் கருத்திடை, அயனோடே மயன்
தோன்றுற நினைதலும், அவரும் துன்னினார்.(11-1)
 
531.வந்திடும் அவர் முகம் நோக்கி, மன்னவன்,
'செந் தழல் படு நகர் அனைத்தும் சீர் பெறத்
தந்திடும், கணத்திடை' என்று சாற்றலும்
புந்தி கொண்டு அவர்களும் புனைதல் மேயினார்.(11-2)
 
2. இராவணன் மந்திரப் படலம்
 
532.மின் அவிர் குழைகளும் கலனும் வில் இட,
சென்னியின் மணி முடி இருளைச் சீறிட,
அன்னபேர் அவையின் ஆண்டு இருந்த ஆண்டகை
முன்னியது உணர்த்துவான், முறையின் நோக்கினான்.(6-1)
 
533.மோதரன் முதலிய அமைச்சர் தம் கணக்கு
ஓதும் நூறாயிர கோடியோரொடும்,
காது வெஞ் சேனையின் காவலோர் கணக்கு
ஓதிய வெள்ள நூறவர்கள்தம்மொடும்.(10-1)
 
534.கும்பகம் மேவியோன், குறித்த வீடணத்
தம்பியர் தம்மொடும், தருக்கும் வாசவன்
வெம் புயம் பிணித்த போர் வீரன் ஆதியாம்,
உம்பரும் போற்றுதற்கு உரிய, மைந்தரும்,(10-2)