542. | 'நிரம்பிடுகில் ஒன்றுஅதை நெடும் பகல் கழித்தும், | |
| விரும்பி முயல்வுற்று இடைவிடாது பெறல் மேன்மை; | |
| வரும்படி வருந்தினும் வராத பொருள் ஒன்றை | |
| நிரம்பும் எனவே நினைதல் நீசர் கடன், ஐயா! | (52-4) |
|
543. | 'ஆசு இல் பல அண்டம் உனதே அரசுஅது ஆக | |
| ஈசன் முன் அளித்தது, உன் இருந் தவ வியப்பால்; | |
| நீசர் தொழில் செய்து அதனை நீங்கியிடலாமோ?-- | |
| வாச மலரோன் மரபில் வந்த குல மன்னா! | (52-5) |
|
544. | ' "ஆலம் அயில்கின்றவன் அருஞ் சிலை முறித்து, | |
| வாலியை வதைத்து, எழு மராமரமும் உட்க, | |
| கோல வரி வில் பகழி கொண்டுடையன்" என்றார்; | |
| சீலம் உறு மானிடன் எனத் தெளியலாமோ? | (52-6) |
|
545. | 'ஆதிபரனாம் அவன் அடித் துணை வணங்கி, | |
| சீதையை விடுத்து, "எளியர் செய் பிழை பொறுக்க" என்று | |
| ஓதல் கடனாம்' என ஒருப்பட உரைத்தான்; | |
| மூதுரை கொள்வோனும், 'அதுவே முறைமை' என்றான். | (52-7) |
|
546. | என்று அவன் உரைத்திட, இராவணனும், நெஞ்சம் | |
| கன்றி, நயனத்திடை பிறந்தன கடைத் தீ; | |
| 'இன்று முடிவுற்றது உலகு' என்று எவரும் அஞ்ச, | |
| குன்று உறழ் புயக் குவை குலுங்கிட நகைத்தான். | (52-8) |
|
547. | நகைத்து, இளவலைக் கடிது நோக்கி, நவில்கின்றான்; | |
| 'பகைத்துடைய மானுடர் வலிச் செயல் பகர்ந்தாய்; | |
| திகைத்தனைகொலாம்; எனது சேவகம் அறிந்தும், | |
| வகைத்திறம் உரைத்திலை; மதித்திலை; | |
| என்?--எம்பி! | (52-10) |
|
548. | 'புரங்கள் ஒரு மூன்றையும் முருக்கு புனிதன்தன் | |
| வரங்களும் அழிந்திடுவதோ? மதியிலாதாய்! | |