குரங்குக்கே உரியதோ? நமக்கில்லையோ? என்னச் சொல்லினான்- எனவும் கூறலானான். |
மகாபார்சுவன் என வான்மீகி கூறியதை 'மாபெரும் பக்கன்' எனச் செய்துள்ளார் கம்பர். அவன் - துன்முகன். கைகவித்தல் - கை அமர்த்தல், கோவம்-கோபம் எதுகைக்கு ஏற்ப கோவம் என்றாயிற்று. |
(38) |
6109. | 'முந்தினர், முரண் இலர் சிலவர், மொய் அமர் |
| நந்தினர்தம்மொடு நனி நடந்ததோ? |
| வந்து ஒரு குரங்கு இடு தீயின் வன்மையால், |
| வெந்ததோ, இலங்கையோடு அரக்கர் வெம்மையும்? |
|
முந்தினர் முரண் இலர் சிலவர் - போருக்கு முன்னால் சென்ற சிலர் வலிமை இல்லாதவராதலின்; மொய் அமர் நந்தினர் - நெருங்கிய போரிலே கேடடைந்தனர்; தம்மொடு நனி நடந்ததோ - அவர்களோடு அரக்கர் வலிமை நீங்கியதாகுமோ; வந்து ஒரு குரங்கு- ஒரு குரங்கு இங்கு வந்து; இடுதீயின் வன்மையால்- நகருக்கு வைத்த தீயின் கொடுமையால்; இலங்கையோடு - இலங்கை மாநகரத்துடனே; அரக்கர் வெம்மையும் வெந்ததோ- அரக்கர்களின் வலிமையும் வெந்து ஒழிந்ததோ? |
நந்தல்-கேடுறுதல். |
(39) |
6110. | 'மானுடர் ஏவுவார்; குரங்கு வந்து, இவ் ஊர்- |
| தான் எரி மடுப்பது; நிருதர் தானையே, |
| ஆனவர் அது குறித்து அழுங்குவார்எனின், |
| மேல் நிகழ்தக்கன விளம்ப வேண்டுமோ? |
|
மானுடர் ஏவுவார்- மானிடர்கள் குரங்கை ஏவி விடுவார்கள்; குரங்கு வந்து- அந்தக் குரங்கு இங்கு வந்து; இவ்வூர்தான் எரி மடுப்பது- இந்த ஊருக்குத் தான் தீயை வைப்பது; நிருதர் தானையே ஆனவர் - அதற்கு அசுரப்படையாய் இருப்பவர்கள்; அது குறித்து அழுங்குவார் எனின் - அதைப் பற்றி நினைத்து வருந்துபவர் என்றால்; மேல் நிகழ்தக்கன- இனிமேல் நிகழத்தக்கதா யிருப்பதை; விளம்ப வேண்டுமோ - நான் விரித்துக் கூற வேண்டுமோ? |
(40) |
6111. | 'நின்று நின்று, இவை சில விளம்ப நேர்கிலென்; |
| நன்று இனி நரரொடு குரங்கை நாம் அறக் |