| தரம்கொடு இமையோர் எனது தாள் பரவ, யான் | |
| என் | |
| சிரம்கொடு வணங்குவதும், மானுடன் திறத்தோ? | (52-10) |
|
549. | 'பகுத்த புவனத் தொகை எனப் பகர் பரப்பும், | |
| மிகுத்த திறல் வானவரும், வேத முதல் யாவும், | |
| வகுத்து, அரிய முத்தொழில் செய் மூவரும் மடிந்தே | |
| உகுத்த பொழுதத்தினும், எனக்கு அழிவும் | |
| உண்டோ? | (52-11) |
|
550. | 'நிறம்தனில் மறம் தொலைய, நீ துயில் விரும்பி, | |
| துறந்தனை, அருஞ் சமரம்; ஆதல், இவை | |
| சொன்னாய்; | |
| இறந்துபட வந்திடினும், இப் பிறவிதன்னில் | |
| மறந்தும் உளதோ, சனகன் மங்கையை விடுத்தல்?' | (52-12) |
|
551. | எனக் கதம் எழுந்து அவன் உரைக்க, இளையோனும், | |
| நினைத்தனன், மனத்திடை நிறுத்து உறுதி சொல்ல; | |
| 'சினத்தொடும் மறுத்த இகழ்வு செய்தனன்; இது | |
| ஊழின் | |
| வினைத் திறம்; எவர்க்கும் அது செல்வது அரிது | |
| அன்றே!' | (52-13) |
|
552. | கறுத்து அவன் உரைத்திடு கருத்தின் நிலைகண்டே, | |
| 'பொறுத்தருள் புகன்ற பிழை' என்று அடி வணங்கி, | |
| உறுத்தல் செய் கும்பகருணத் திறலினோனும், | |
| 'மறுத்தும் ஒரு வாய்மை இது கேள்' என | |
| உரைத்தான்: | (52-14) |
|
553. | 'ஏது இல் கருமச் செயல் துணிந்திடுதல் எண்ணி, | |
| தீதொடு துணிந்து, பினும் எண்ணுதல் சிறப்போ? | |
| யாதும் இனி எண்ணியதில் என்ன பயன்? ஐயா! | |
| போதியது நம் அரசு, பொன்ற வரு காலம். | (52-15) |