பக்கம் எண் :

986யுத்த காண்டம் 

554.என, அவன் அடித் துணை இறைஞ்சி, வாய்
புதைத்து,
இனிய சித்திரம் என ஏங்கி நின்று, தான்
நனை மலர்க் கண்கள் நீர் சொரிய, நல் நெறி
வினை பயில் வீடணன் விளம்பல் மேயினான்:(74-1)
 
555.'சானகி, உலகு உயிர் எவைக்கும் தாய் எனல்
ஆனவள், கற்பினால் எரிந்தது அல்லது,
கோ நகர் முழுவதும் நினது கொற்றமும்,
வானரம் சுட்டது என்று உணர்தல் மாட்சியோ?'(74-2)
 
556.'ஈசன்தன்வயின் வரம் கொளும்முன்னம், யான்
அவனை
வீசும் வான் சுடர் வரையொடும் விசும்பு உற
எடுத்தேன்;
ஆசு இல் அங்கது கண்டு அவன் அரும் பதத்து
ஊன்றக்
கூசி, என் வலி குறைந்திலென், பாதலத்து
அமர்ந்தேன்;(116-1)
 
557.'அமர்ந்து, நீங்குதற்கு அருமை கண்டு, "அவன் பதம்
அகத்தே
சுமந்து, நீ தவம் புரிக!" எனச் சுக்கிரன் உரைப்ப,
தமம் திரண்டு உறும் புலப் பகை சிமிழ்திதிடத்
தருக்கி
நிமிர்ந்து நின்றனென், நெடும் பகல் அருந் தவ
நிலையின்(116-2)
 
558.நின்று பல் பகல் கழிந்திட, நிமலன் நெஞ்சு உருகி,
"நன்று, நன்று!" என நயந்து, எனை வரும்படி
அழைத்து,
"ஒன்றினாலும் நீ அழிவு இலாது உகம் பல கழியச்
சென்று வாழுதி எனத் தந்த வரம் சிதைந்திடுமோ?(116-3)