559. | 'கார்த்தவீரியன், வாலி என்று அவர் வலி கடக்கும் | |
| மூர்த்தம் என்னிடத்து இல் எனக் கோடலை; முதல் | |
| நாள் | |
| சீர்த்த நண்பினர் ஆயபின், சிவன் படை உவர்மேல் | |
| கோத்து, வெஞ் சமம் புரிந்திலென், எனது உளம் | |
| கூசி. | (116-4) |
|
560. | 'இந்த மெய்ம்மை நிற்கு உரைப்பது என்? இவ் வரம் | |
| எனக்குத் | |
| தந்த தேவனுக்குஆயினும் என் வலி தவிர்த்துச் | |
| சிந்த ஒண்ணுமோ? மானிடர்திறத்து எனக்கு அழிவு | |
| வந்தது என்று உரைத்தாய்; இது வாய்மையோ?-- | |
| மறவோய்! | (116-5) |
|
561. | 'ஆயது ஆக, மற்று அந்த மானுடவரோடு அணுகும் | |
| தீய வான் குரங்கு அனைத்தையுஞ் செறுத்து, | |
| அற நூறி, | |
| தூய வானவர் யாரையும் சிறையிடைத் தொடுத்துக் | |
| காய்வென்' என்று தன் கண் சிவந்து இனையன | |
| கழறும். | (116-6) |
|
3. இரணியன் வதைப் படலம் |
562. | 'ஓதும் ஆயிர கோடியின் உகத்து ஒரு முதல் ஆய், | |
| தாது உலாவிய தொடைப் புயத்து இரணியன் | |
| தமரோடு | |
| ஆதி நாள் அவன் வாழ்ந்தனன்; அவன் அருந் | |
| தவத்துக்கு | |
| ஏது வேறு இல்லை; யார் அவன்போல் தவம் | |
| இழைத்தார்? | |
|
(இப் படலத்தின் தொடக்கச் செய்யுளாக, 'வேதம் கண்ணிய' எனத் தொடங்கும் பாடலின் முன்னர். அமைந்துள்ளது) |
563. | 'இந்த இந்திரன் இமையவர் அவனுக்கு ஓர் | |
| பொருளோ? | |
| உந்தும் அண்டங்கள் அனைத்தினும் உள்ள | |
| இந்திரரும் | |