பக்கம் எண் :

988யுத்த காண்டம் 

அந்த நான்முகர் உருத்திரர் அமரர் மற்று எவரும்,
வந்து, இவன் பதம் முறை முறை வணங்கிட
வாழ்ந்தான்.(2-1)
 
564.'திருமகட்கு இறை உலகினும், சேண்படு புரம் மூன்று
எரிபடுத்திய ஈசன்தன் பொருப்பினும், ஏகி,
சுரர் எனப்படும் தூயவர் யாவரும் தொழுது, ஆங்கு
"இரணியாய நம!" என்று கொண்டு ஏத்தல்
கேட்டிருக்கும்.(5-1)
 
565.' "ஓம் அரியாய நம!" என ஒழிவுறாது ஓதும்
நாம நான் மறை விடுத்து அவன்தனக்கு உள்ள
நாமம்,
காமமே முதல் குறும்பு எறி கடவுளர் முனிவர்-
ஆம் அது ஓதுகில், அவன் தனக்கு ஒப்பவர் யாரோ?(9-1)
 
566.ஆலும் வெவ் வலி அவுணர் கோன் அருந் தவப்
பெருமை
ஏலுமோ, எமக்கு இயம்பிட? இறைவ! மற்று அவன்
பேர்
மூல மா மறை இது என, மூஉலகு உள்ளோர்
தாலமே மொழிந்திட்டது சான்று எனத் தகுமால்.(10-1)
 
567.'குனிப்பு இலாத பல் ஆயிர கோடி அண்டத்தின்
நுனிக்கும் வானவர் முதலிய உயிர்த் தொகை
நோக்கில்,
அனைத்தும் அன்னவன் ஏவலைத் தலைக்கொண்டு,
அங்கு அவன் பேர்
நினைத்து வாழ்த்திட, மூவர்போல் ஒரு தனி
நின்றான்.(18-1)
 
568.'அன்னவன், புகழ், சீலம், நல் அறம், தனி மெய்ம்மை,
உன்னும் நான் மறையோடு அருள் நீதியும்
பொறையும்