பக்கம் எண் :

990யுத்த காண்டம் 

தெளிவு பெற்று, இறை பூண்டுளேன்; யான் அலால் தெய்வம்,
மொழி இல் மூடரும், வேறு உளது ஆம் என்று
மொழியார்.(55-1)
 
573.'உயிர்க்கு உயிர் ஆகி நின்று உதவும் பான்மை, பார்
அயிர்க்குறும் நேயர் தம் செயலில் காண்டல்போல்,
பயிர்ப்பு உறும் அதனிலே பாசம் நீக்கி, வேறு
அயிர்ப்பு அறும் அறிவினில் அறிவர், சீரியோர். (67-1)
 
574.'நான்முகத்து ஒருவனும், நாரி பாகனும்,
தான் அகத்து உணர்வதற்கு அரிய தத்துவத்-
தோன் இகத்தொடு பரம் இரண்டும் எங்குமாய்,
ஊனகத்து உயிரகத்து உலவும் மூர்த்தியான். (67-2)
 
575.'வையமேல் இனி வரும் பகை உள எனின்,

வருவது ஒன்று என்றாலும்,

"உய்ய உள்ளுளே ஒருவனை உணர்ந்தனென்"

என்று என் முன் உரைசெய்தாய்;

செய்ய வேண்டுவது என் இனி? நின் உயிர்

செகுக்குவென்; சிறப்பு இல்லாப்

பொய்யிலாளனைப் பொருந்திய பெரும் பகை

போய பின், புகழ் ஐயா! 

(79-1)
 
576.' "இவனை ஏழ் நிலை மாளிகை உம்பர்மேல் ஏற்றிப்
புவனம் தன்னிலே நூக்கும்" என்று அவுணர் கோன்
புகல,
புவனம் உண்டவன் கழல் இணைப் புண்ணியன்
தன்னைப்
பவனன்தன்னிலும் வெய்யவர் பற்றியே எடுத்தார்.(98-1)
 
577.'உற்று எழுந்தனர், மாளிகை உம்பர்மேல் கொண்டு,
கற்று அறிந்தவர்க்கு அரசனைக் கடுந் திறல்
அவுணர்