பக்கம் எண் :

70யுத்த காண்டம் 

உளர்   எனக்   கோடலும்  கொண்டாய் - உள்ளனர் என்று
எண்ணிக் கொண்டாய்.
 

மாற்றம் -  சொற்கள் ஒருமுறை  பெறவிலை - பெறவில்லை.
கல்லுதல்-தோண்டுதல் (கிளர்தல்) விண்-விண்ணுலகம்.  கிளை -
உறவினர். கொல்லும் மாற்றலர்  என்பது  கொல்லும்  ஆற்றலர்
எனவும் பொருள் கொள்ள நின்றது.
 

(104)
 

6175.

'தேவரின் பெற்ற வரத்தினது என் பெருஞ்

செருக்கேல்,

மூவரில் பெற்றம் உடையவன்தன்னொடும், முழுதும்

காவலின் பெற்ற திகிரியான்தன்னொடும், கடந்தது

ஏவரின் பெற்ற வரத்தினால் ? இயம்புதி-

இளையோய் !

 

இளையோய் - இளையவனே ! தேவரின் பெற்ற வரத்தினது
- தேவர்களிடம் நான்  பெற்ற   வரத்தினால்   அமைந்தது;  என்
பெரும் செருக்கேல்
- எனது பெரிய   வலிமை   என்பாயாயீன்;
மூவரில்  -   முதற்   கடவுள்   மூவரில்;பெற்றம் உடையவன்
தன்னொடும்
- காளையை   ஊர்தியாக உடைய சிவபிரானுடனும்;
முழுதும்   காவலின் பெற்ற  - உலகம் முழுவதையும் காக்கும்
திறம்பெற்ற;  திகிரியான்  தன்னொடும்  -   சக்கரப் படையை
உடைய திருமாலுடனும்;கடந்தது  -  (செய்த போரிலே) வெற்றி
பெற்றது;  ஏவரின்  பெற்ற வரத்தினால்  -  ஏவரிடம் பெற்ற
வரத்தால்;இயம்புதி - கூறுவாயாக.
 

வயதில்   மாத்திரமல்லாது அறிவிலும் இளையவன் என்பது
தோன்ற 'இளையோய்' என அழைத்தான். முதற்கடவுளர் மூவர்
அரன்  அரி   அயன்  என்போர். பெற்றம்-காளை. "காவலின்
பெற்ற திகிரி   என்றது 'சக்கரப்படை' உலகம் காக்க வல்லது
என்பதை   உணர்த்தும்.   கடத்தல்   என்றது   எதிர்நின்று
போர்செய்து வெல்லுதல் (புறநா.8)
 

(105)
 

6176.

' "நந்தி சாபத்தின் நமை அடும், குரங்கு" எனின்,

நம்பால்

வந்த சாபங்கள் எனைப் பல; அவை செய்த வலி

என்?

இந்திராதியர், சித்தர்கள், இயக்கர், நம் இறுதி

சிந்தியாதவர் யார் ? அவை நம்மை என் செய்த ?