பக்கம் எண் :

 இராவணன் மந்திரப் படலம் 71

நந்தி சாபத்தின்- நந்திதேவன்  கொடுத்த சாபத்தால்; நமை
அடும்   குரங்கு   எனின்  
- குரங்குகள் நம்மைக் கொல்லும் 
என்றால்;நம்பால்  வந்த   சாபங்கள்  எனைப்பல - நம்மை
வந்தடைந்த சாபங்கள் எத்தனை எத்தனை ?அவை செய்த வலி
என்
- அவை விளைவித்த துன்பம்   என்ன;  இந்திராதியர் -
இந்திரன்   முதலான தேவர்களும்;  சித்தர்கள்,    இயக்கர் -
சித்தர்களும்   இயக்கர்களும்   ஆகியோரில்;    நம்   இறுதி
சிந்தியாதவர் யார் ? 
-   நமது   அழிவை   நினைக்காதவர் 
எவருண்டு ?அவை  நம்மை என் செய்த - அவை எல்லாம்
நம்மை என்ன செய்துவிட்டன;
 

தனது   வெற்றிக்கும்,   வலிமைக்கும்   தேவர் தந்த வரம்
காரணமல்ல என்றவன், அவர்களது சாபமும்  தன்னை  எதுவும்
செய்யஇயலாது என்றான்.
 

(106)
 

6177.

'அரங்கில் ஆடுவார்க்கு அன்பு பூண்டுடை வரம்

அறியேன் ;

இரங்கி யான் நிற்ப, என் வலி அவன்வயின் எய்த

வரம் கொள் வாலிபால் தோற்றனென்; மற்றும் வேறு

உள்ள

குரங்கு எலாம் எனை வெல்லும் என்று எங்ஙனம்

கோடி ?

 

அரங்கில் ஆடுவார்க்கு - அம்பலத்திலே நடனமாடுகின்ற
சிவபிரானுக்கு;   அன்பு   பூண்டு உடை வரம் அறியேன்-
அன்பு    கொண்டு   அதனால்   பெற்ற   வரபலமுடையவன்
என்பதனை அறியாதவனாய்; இரங்கியான் நிற்ப - வாலியுடன்
செய்த  போரில்  மனம் கலங்கி நான்நிற்க; என் வலி அவன்
வயின்  எய்த
-  எனது  வலிமை அவனிடம் செல்ல; வரம்
கொள் வாலிபால்   தோற்றனென்  
-  எதிர்த்தவர் பலம்
தனக்கு வரவேண்டும்   என்று  வரம் பெற்றிருந்த வாலியிடம்
நான்  தோல்வியுற்றேன்;  மற்றும் வேறுள குரங்கெலாம் -
இதனால் மற்றுமுள்ள குரங்குகள் எல்லாமே; எனைவெல்லும்
என்று எங்ஙனம்   கோடி
- என்னை வென்று விடும் என்று
எப்படிக் கொள்ளுவாய்?
 

வலி-பலம். வயின்-இடம். இராவணன் வாலிபால் தோற்று,
வாலால், கட்டுண்ட செய்தி உத்தரகாண்டத்தில் உள்ளது.
 

(107)