| சொன்ன நம்பொருட்டு, உம்பர்தம் சூழ்ச்சியின் |
| துணிவால்; |
| இன்னம் ஏகுதி போலும்' என்று அடி தொழுது |
| இரந்தான். |
|
தன்னின் முன்னிய பொருள் இலா - தன்னை விடச்சிறந்த பொருள் வேறொன்றில்லாத; ஒரு தனித்தலைவன் - ஒப்பற்ற தலைவனாகிய திருமாலே; உம்பர் தம் சூழ்ச்சியின் துணிவால் - தேவர்களின் ஆலோசனை முடிவின்படி; சொன்னநம் பொருட்டு - அந்தத் தேவர்களெல்லாம் தீயவர் என்று கூறிய நம்மை அழிக்கும் பொருட்டு; அன்ன மானுடன் ஆகி வந்து - அந்த மானிடனான இராமனாக வந்து; அவதரித்து அமைந்தான் - அவதாரம் செய்து நம்முடன் போர் செய்ய அமைந்தான்; இன்னம் ஏகுதி போலும் - இதனைத் தெரிந்த பின்னும் போருக்குச் செல்வாய் போலும்;என்று அடி தொழுது இரந்தான் - என்று இராவணன் அடிகளில் வணங்கி யாசித்துக் கூறினான். |
முன்னிய-சிறந்த. ஒருதனித்தலைவன்-ஒப்பற்ற தலைவன். |
(111) |
இராவணன் மறுமொழி |
6182. | அச் சொல் கேட்டு, 'அவன் ஆழியான் என்றனை ; |
| ஆயின், |
| கொச்சைத் துன்மதி எத்தனை போரிடைக் |
| குறைந்தான் ? |
| இச்சைக்கு ஏற்றன, யான் செய்த இத்தனை காலம், |
| முச்சு அற்றான்கொல், அம் முழுமுதலோன் ?' என |
| முனிந்தான். |
|
அச்சொல் கேட்டு- வீடணன் கூறிய அந்தச் சொற்களைக் கேட்டு; அவன் ஆழியான் என்றனை - அந்த இராமனை சக்கரப்படையை உடைய திருமாலின் அவதாரம் என்றாய்; ஆயின் கொச்சைத் துன்மதி - அப்படியானால் இழிந்த துர்புத்தி உடைய அவன்; எத்தனை போரிடைக் குறைந்தான்- என்னுடன் செய்த எத்தனை போர்களிலே தோற்றான்.இச்சைக்கு ஏற்றன - எனது விருப்பத்துக்கேற்றவைகளையே;யான் செய்த இத்தனைகாலம்- நான் செய்து கொண்டிருந்த இத்தனை காலமும்; அம்முழு முதலோன் - நீ முழு முதல்வன் எனக்கூறும் அவன்;முச்சு அற்றான் |