பக்கம் எண் :

 இராவணன் மந்திரப் படலம் 75

கொல் -  மூச்சற்றவனாக இருந்தான்  போலும்;  என முனிந்தான்
- என்று கூறி இராவணன் வீடணனைச் சினந்தான்.
 

ஆழியான் - சக்கரப்படையுடைய   திருமால்.  கொச்சை-இழிந்த.
துன்மதி-கெட்டபுத்தி. குறைந்தான்-தோல்வியுற்றான். இச்சை-விருப்பம்.
அற்றான் - இறந்தனனோ  என்பது  பொருள். முச்சு: மூச்சு என்பதன்
குறுக்கல் விகாரம்.
 

(112)
 

6183.

'இந்திரன்தனை இருஞ் சிறை இட்ட நாள்,

இமையோர்

தந்தி கோடு இறத் தகர்த்த நாள், தன்னை யான்

முன்னம்

வந்த போர்தொறும் துரந்த நாள், வானவர் உலகைச்

சிந்த வென்ற நாள், சிறியன்கொல், நீ சொன்ன

தேவன்?

 

இந்திரன்தனை     இருஞ்சிறை    இட்டநாள்   -  நான்
தேவர்களுக்குத் தலைவனான இந்திரனைப் பெரியதொரு சிறையிலே
அடைத்து    வைத்த   காலத்திலும்;  இமையோர்   தந்திகோடு
இறதகர்த்த நாள்
- அந்தத் தேவர்களது யானையான ஐராவதத்தின்
தந்தங்கள்   முறியும்படி   தகர்த்த   காலத்திலும்;  தன்னை யான்
முன்னம்
-  அந்தத் திருமாலை யான் இதற்கு முன்பு; வந்த போர்
தொறும்  துரந்த   நாள் 
- வந்து நேர்ந்த போர்களில் எல்லாம்
தோற்று   ஓடுமாறு   துரத்திய  போதும்; வானவர் உலகைச்சிந்த
வென்ற  நாள் 
  -   தேவர் உலகத்தை அவர்கள் சிதறி ஓடுமாறு 
வென்ற நாளிலும்; நீ  சொன்ன   தேவன்  -   நீ கூறிய அந்தத்
திருமாலாகிய தேவன்;சிறியன் கொல் -  சிறியவனாய்  இருந்தான்
போலும்.
 

இருஞ்சிறை-பெரிய சிறை.  தந்தி-யானை  (இங்கு  ஐராவதம்
என்ற வெள்ளை யானை), கோடு-தந்தம்.
 

(113)
 

6184.

'சிவனும், நான்முகத்து ஒருவனும், திரு நெடு மாலாம்

அவனும், மற்று உள அமரரும், உடன் உறைந்து

அடங்க,

புவனம் மூன்றும் நான் ஆண்டுளது, ஆண்ட அப்

பொரு இல்

உவன் இலாமையினோ ? வலி ஒதுங்கியோ ?

உரையாய் !