பக்கம் எண் :

76யுத்த காண்டம் 

சிவனும்   நான்முகத்து ஒருவனும் - சிவபெருமானும், நான்கு
முகங்களை உடைய ஒருவனான பிரமனும்;திருநெடுமாலாம் அவனும்
-திருமகள் நாயகனான திருமாலாகிய அவனும்; மற்று உள அமரரும்
- மற்றும் உள்ள தேவர்கள் அனைவரும்;உடன் உறைந்து  அடங்க
- எனது ஆட்சியில் ஒரு சேர அடங்கி இருக்க;  புவனம்  மூன்றும்
நான் ஆண்டுளது
- மூன்று உலகங்களையும் நான் ஆட்சி   செய்து
வந்துள்ளது; ஆண்ட அப்பொரு இல் உவன் -   மூவுலகத்தையும்
ஆண்ட  அந்த   ஒப்பில்லாதவனான   அவன்;இலாமையினோ -
இல்லாமையினாலா;   (அல்லது)   வலி   ஒதுங்கியோ   - எனது
வலிமைக்கு முன் நிற்கமாட்டாது  ஒதுங்கி   இருந்து   விட்டதாலோ?
உரையாய் - நீ கூறுவாயாக.
 

'ஆண்ட   அப்பொருவில்  வில்' எனப் பிரித்து  கையாண்ட
அந்தப் போரிட வல்ல வில்லை (சார்ங்கம்)   உடையவன்  எனக்
கூறினும் பொருந்தும். உவன்: என்பது சுட்டு. (இடை) திருநெடுமால்
என்ற சிறப்புக்குரிய பெயரை இராவணன்  எள்ளுதற்  குறிப்போடு
சொல்லினான்.
 

(114)
 

6185.

'ஆயிரம் பெருந் தோள்களும், அத் துணைத்

தலையும்,

மா இரும் புவி உள்ளடி அடக்குறும் வடிவும்,

தீய, "சாலவும் சிறிது" என நினைந்து, நாம் தின்னும் 

ஓயும் மானுட உருவு கொண்டனன்கொலாம்-

உரவோன் ?

 

ஆயிரம் பெருந்தோள்களும் - ஆயிரம் பெரும்தோள்களையும்;
அத்துணைத்தலையும்- அந்த அளவினதான தலைகளையும்;மாஇரும்
புவி
-   பெரிய இந்த உலகம் முழுவதையும்;  உள்ளடி அடக்குறும்
வடிவும்
- தனது  ஓரடிக்குள்ளே அடக்கும் பெரியதொரு வடிவமும்;
தீய   சாலவும்   சிறிது என நினைந்து - தீமை தருவன, மிகவும்
சிறியவை என்று நினைத்து; உரவோன் - நீ  சிறப்பித்துச்  சொல்லும்
அந்த வலியவன்;   நாம் தின்னும் ஓயும் மானுட உருவு -   நாம்
தின்னத்தகுந்த வலிமையற்ற மனித வடிவத்தை; கொண்டனன் கொல்
- கொண்டானோ?
 

திருமால் ஆயிரம் தோள்களும், ஆயிரம் தலைகளும், ஆயிரம்
கைகளும், ஆயிரம் கண்களும்  உடையவர் என்பதை "காலாயிரம்
முடியாயிரம்,   ஆயிரம்   கை   பரப்பி"  என்ற அட்டப்பிரபந்தப்
பாடலாலும் புருஷ சூக்கத்தாலும் அறியலாம். உலகத்தை ஓரடிக்கீழ்
ஒடுக்கிய   பெருவடிவம்   திருவிக்கிரம்   அவதாரம்.  அத்தகைய
பேருருவம்