சிறியது - தீயது என நினைத்து, நாம் தின்னத்தக்க - வலிமையற்ற மனித வடிவைக் கொண்டவனையோ-நம்மை எல்லாம் கொல்ல வல்ல வலிமையுடையவன் என்று கூறினாய் என வீடணனை வெகுண்டும், இராமபிரானை இகழ்ந்தும் கூறினான். |
(115) |
6186. | 'பித்தன் ஆகிய ஈசனும் அரியும், என் பெயர் கேட்டு, |
| எய்த்த சிந்தையர், ஏகுழி ஏகுழி எல்லாம், |
| கைத்த ஏற்றினும் கடவிய புள்ளினும், முதுகில் |
| தைத்த வாளிகள் நின்று உள, குன்றின் வீழ் |
| தடித்தின்.* |
|
பித்தன் ஆகிய ஈசனும் அரியும் - பித்தனாகிய சிவபெருமானும், திருமாலும்;என் பெயர் கேட்டு - எனது பெயரைக் கேட்டவுடன்; எய்த்த சிந்தையர் - (அச்சத்தால்) சோர்ந்த மனத்தினராய்; ஏகுழி ஏகுழி எல்லாம் - அவர் சென்ற சென்ற இடமெல்லாம்; கைத்த ஏற்றினும் - சிவன் செலுத்திச் சென்ற காளை மீதும்;கடவிய புள்ளினும் - திருமால் ஏறிச் சென்ற கருடன் மீதும்; முதுகில் தைத்த வாளிகள் நின்று - நான் எய்த பாணங்கள் முதுகில் தைத்து நின்ற வடுக்கள்; குன்றின் வீழ் தடித்தின் உள - மலைமீது விழுந்த இடிபோல் உள்ளன அன்றோ? |
எய்த்த-சோர்ந்த. ஏகுழி-செல்லுமிடம். கைத்த ஏறு-செலுத்திய காளை. உகைத்த என்ற சொல் முதல் (எழுத்து) குறைந்து கைத்து என நின்றது. கடவிய புள்-செலுத்திய கருடன். தடித்து-இடி. வாளிகள். இங்கு அம்புகளால் ஆன வடுக்களைக் குறித்தது. இடி விழுந்த மலையில் சிதைந்த இடிபாடுகள் காணப்படுவன போல அம்புபட்ட வடுக்கள் காணப்பட்டன என்பது கருத்து. |
(116) |
6187. | 'வெஞ் சினம் தரு போரின் எம்முடன் எழ வேண்டா; |
| இஞ்சி மா நகர் இடம் உடைத்து, ஈண்டு இனிது |
| இருத்தி ; |
| அஞ்சல் அஞ்சல் !' என்று, அருகு இருந்தவர் முகம் |
| நோக்கி, |
| நஞ்சின் வெய்யவன் கை எறிந்து, உரும் என |
| நக்கான். |
|
வெஞ்சினம் தரு போரின்- கொடிய சினத்தை உண்டாக்கும் போரிலே பங்குகொள்ள; எம்முடன் எழ வேண்டா - நீ எங்களோடு புறப்படவேண்டா; இஞ்சி மாநகர் இடம் உடைத்து - மதில் சூழ்ந்த மாநகராகிய இலங்கையில் நிறைய இடமிருக்கிறது; ஈண்டு இனிது |