பக்கம் எண் :

78யுத்த காண்டம் 

இருத்தி -   இங்கு  நீ  இனிதே   தங்கி   இருப்பாயாக; அஞ்சல்
அஞ்சல் என்று - அஞ்சாதே, அஞ்சாதே என்று  கூறி ;நஞ்சின்
வெய்யவன்
-  கொடிய விடத்தினும் கொடியவனான  இராவணன்;
அருகு இருந்தவர் முகம் நோக்கி
- அருகில் இருந்த அமைச்சர்
முதலானவர்களின்  முகத்தைப் பார்த்து;கை எறிந்து - கையோடு
கையைக் கொட்டி; உரும் என நக்கான் - இடி இடித்தது போலச்
சிரித்தான்.
 

அஞ்சல்!  அஞ்சல்!  என்ற   அடுக்குத்  தொடர்  எள்ளுதற்
குறிப்புடையது. 'மாநகர் இடம்  உடைத்து'   போதுமான   அளவு
நிறைய இடம் இருக்கிறது என்றது ஏளனமாகக் கூறியதாம்.
 

(117)
 

வீடணன் மறுபடியும் கூறுதல்
 

6188.

பின்னும் வீடணன், 'ஐய ! நின் தரம் அலாப்

பெரியோர்,

முன்னை நாள், இவன் முனிந்திடக் கிளையொடும்

முடிந்தார்;

இன்னம் உண்டு, யான் இயம்புவது ;

இரணியன்என்பான்-

தன்னை உள்ளவா கேட்டி' என்று உரைசெயச்

சமைந்தான் :

 

பின்னும் வீடணன் -  இராவணன் கூறியதைக் கேட்டபின்பு
வீடணன்;  ஐய - தலைவனே; நின்தரம் அலாப் பெரியோர் -
உன் அளவினர் அல்லாத  பெரியோர் பலர்;  முன்னை நாள் -
மிக முற்பட்ட காலத்திலே; இவன் முனிந்திட - இந்தத் திருமால்
கோபம்  கொண்ட காரணத்தால்;  கிளையொடும்  முடிந்தார் -
உற்றார்  உறவினரோடு  அழிந்தார்கள்;  இன்னம் உண்டு யான்
இயம்புவது 
-   இன்னும்   உனக்கு  நான் சொல்ல  வேண்டிய
தொன்றுண்டு;இரணியன் என்பான் தன்னை-  இரணியன் என்று
சிறப்பித்துக்  கூறப்படுபவனது செய்தியை;  உள்ளவா  கேட்டி-
உள்ளபடியே நான்  கூறக்  கேட்பாயாக;  என்று  உரை செயச்
சமைந்தான்
- என்று கூறுவதற்கு அமைந்தான்.
 

நின்தரம்-உன்னளவு. உன்னைவிட அறிவு ஆற்றல்களில்
மேம்பட்ட என்பது கருத்து. உள்ளவா-உள்ளவாறு என்பதன்
விகாரம்.
 

(118)