பக்கம் எண் :

80யுத்த காண்டம் 

இரணியன் இயல்பும் ஏற்றமும்
 

6189.

'வேதம் கண்ணிய பொருள் எலாம் விரிஞ்சனே

ஈந்தான்;

போதம் கண்ணிய வரம் எலாம் தரக் கொண்டு

போந்தான்;

காதும் கண்ணுதல், மலர் அயன், கடைமுறை

காணாப்

பூதம் கண்ணிய வலி எலாம் ஒரு தனி பொறுத்தான்.

 

வேதம்  கண்ணிய  பொருள்  எலாம்   -   (இரணியனுக்கு)
வேதங்கள் குறித்த எல்லாப் பொருள்களையும்;விரிஞ்சனே ஈந்தான்
- பிரமதேவனே  (குருவாக)  அறிவித்தான்;  போதம்  கண்ணிய -
சிறந்த  ஞானத்தால்  தான்  கருதிய;வரம்  எலாம்தர -  எல்லா
வரங்களையும் அப்பிரமனேதர;  கொண்டு  போந்தான் - பெற்றுக்
கொண்டு  வந்தான்;காதும்  கண்ணுதல் -  உயிர்களை  எல்லாம்
அழிக்கவல்ல   நெற்றிக்  கண்ணனாகிய  சிவனும்;மலர் அயன் -
தாமரை மலரில் உறையும் பிரமனும்; கடைமுறை காணாப் பூதம் -
முடிவு காணமுடியாத ஐம்பெரும் பூதங்களும்; கண்ணியவலிஎலாம்-
கொண்டுள்ள  வலிமை  எல்லாம்; ஒரு தனி பொறுத்தான் - தான்
ஒருவனே தாங்குவனானான்.
 

வேதம்   கண்ணிய   பொருள் - வேதங்களின்  உட்பொருள்
விரிஞ்சன் -  பிரமன்.  வேதங்களைப்   படைத்த   வேதாவாகிய
பிரம்மாவே   இரணியனுக்கு   வேத உண்மைகளை அறிவித்தான்
என்ற சிறப்பை 'ஏகாரம்' உணர்த்தும். காதும்- அழிக்கும்; சங்கார
காரணன் சிவன் என்பதை 'காதும் கண்ணுதல்' என்பது குறித்தது.
கடைமுறை  -   கடைசி  எல்லை.   சிவன்,  பிரமன்,  பூதங்கள்
கொண்டுள்ள   வலிமையெல்லாம்   இரணியன்தான்   ஒருவனே
பெற்றிருந்தான் என்றார். பொறுத்தல் - தாங்குதல்.
 

(1)
 

6190.

'எற்றை நாளினும் உளன் எனும் இறைவனும்,

அயனும்,

கற்றை அம் சடைக் கடவுளும், காத்து, அளித்து,

அழிக்கும்