பக்கம் எண் :

 இரணியன் வதைப் படலம் 81

ஒற்றை அண்டத்தின் அளவினோ? அதன் புறத்து

உலவா

மற்றை அண்டத்தும், தன் பெயரே சொல,

வாழ்ந்தான்.

 

ஏற்றை  நானினும்  உளன் எனும் இறைவனும் - எந்நாளும்
அழியாது உள்ளவன்  என்று   கூறத்தக்க  இறைவனான திருமாலும்;
அயனும் 
-  படைப்புக்  கடவுளான  பிரமதேவனும்; கற்றை அம்
சடைக்கடவுளும் 
-   அழகிய சடைக் கற்றையை உடையசிவனும்;
காத்து, அளித்து,  அழிக்கும் 
-   முறையே   படைத்து, காத்து,
அழிக்கின்றதாகிய; ஒற்றை அண்டத்தின் அளவினோ - இந்த ஒரு
அண்டத்தின் அளவில் மட்டுமோ?; அதன் புறத்து உலவா - இந்த
அண்டத்துக்குப்   புறத்திலும்   எண்ணற்றனவாக  உள்ள;  மற்றை
அண்டத்தும்
- வேறு வேறு அண்டங்களிலும்;தன்பெயரே சொல-
(வாழ்பவரெல்லாம்) தனது பெயர் ஒன்றினையே (புகழ்ந்து) பேசுமாறு;
வாழ்ந்தான்
- இரணியன் வாழ்ந்து வந்தான்.
 

எற்றை நாளினும் - எந்த ஊழிக் காலத்தும் என்பது பொருள்.
இறைவன்   எங்கும்   நிறைந்திருப்பவன் என, திருமாலைச் சுட்டி
நின்றது  (விஷ்ணு  என்ற வடமொழிச்  சொல்  இதே பொருளை
உடையது)
 

(2)
 

6191.

'பாழி வன் தடந் திசை சுமந்து ஓங்கிய பணைக்

கைப்

பூழை வன் கரி இரண்டு இரு கைக்கொடு

பொருத்தும்;

ஆழம் காணுதற்கு அரியவாய், அகன்ற பேர் ஆழி

ஏழும் தன் இரு தாள் அளவு எனக் கடந்து ஏறும்.

 

பாழி  வன் தடந்திசை - அகன்ற, வலிய, பெரியதிசைகளை;
சுமந்து   ஓங்கிய   பணைக்கை -  சுமந்து  உயர்ந்த பருத்த
தும்பிக்கைகளில் எல்லாம்; பூழை வன் கரி - உள்துளை உடைய
வன்மை மிகுந்த திக்குயானைகளில்;  இரண்டு  இருகைக் கொடு
பொருத்தும்
- இரண்டினைத் தனது இரண்டு கைகளிலும் கொண்டு
மோத விடுவான்;  ஆழம்  காணுதற்கு அரியவாய் - ஆழத்தை
அளந்தறிய இயலாதனவாகிய;அகன்ற   பேர் ஆழி  ஏழும் -
விசாலமான ஏழு கடல்களையும்;  தன் இரு தாள் அளவென -
தனது இருபாதங்களின் அளவு  உடையன  என்னும்படி;  கடந்து
ஏறும்
- கடந்து கரை ஏறுவான்.
 

(3)