(5) |
6194. | 'சாரும் மானத்தில், சந்திரன் தனிப் பதம் சரிக்கும்; |
| தேரின் மேலின் நின்று, இரவிதன் பெரும் பதம் |
| செலுத்தும்; |
| பேர்வு இல் எண் திசைக் காவலர் கருமமும் பிடிக்கும்; |
| மேரு மால் வரை உச்சிமேல் அரசு வீற்றிருக்கும். |
|
சாரும் மானத்தில் - சந்திரன் ஏறிச் செல்லும் விமானத்திலே (அமர்ந்து);சந்திரன் தனிப்பதம் - சந்திரனுக்குரிய சிறந்த ஆட்சி நடத்தி; சரிக்கும் - உலாவுவான்; தேரின் மேல் நின்று - சூரியனுக்குரிய தேரின்மீது நின்று; இரவிதன் பெரும்பதம் செலுத்தும் - சூரியனுக்குரிய ஆட்சியை நடத்துவான்; பேர்வு இல் எண் திசைக் காவலர் - பெயர்தல் இல்லாத எட்டுத்திசைதிக்குக் காவலர்களின்; கருமமும் பிடிக்கும் - தொழிலையும் ஒருவனே இயற்றுவான்; மேரு மால் வரை உச்சிமேல் - பெரிய மேரு மலையினது உச்சியின்மேல்; அரசு வீற்றிருக்கும் - பேரரசனாக வீற்றிருப்பான். |
கருமம் - தொழில், மானம் - விமானம் எண்திசைக் காவலர் - அட்டதிக்குப் பாலகர்கள் (இந்திரன் - அக்கினி - யமன் - நிருதி - வருணன் - வாயு - குபேரன் - ஈசானன்) |
(6) |
6195. | 'நிலனும், நீரும், வெங் கனலொடு காலும் ஆய், |
| நிமிர்ந்த |
| தலனுள் நீடிய அவற்றின் அத் தலைவரை மாற்றி, |
| உலவும் காற்றொடு கடவுளர் பிறரும்ஆய், உலகின் |
| வலியும் செய்கையும் வருணன்தன் கருமமும், |
| மாற்றும். |
|
நிலனும் நீரும் - மண்ணும், தண்ணீரும்; வெங்கனலொடு - வெப்பம் மிக்க நெருப்புடனே;காலும் ஆய் - காற்றும் ஆகி; நிமிர்ந்த தலனுள் நீடிய அவற்றின் - எங்கும் பரவிய இவ்வண்டத்திலே நிலைபெற்றுள்ள அவைகளின்; அத்தலைவரை மாற்றி - தலைவர்களாய் இருப்பவர்களை மாற்றி;உலவும் காற்றொடு - உலாவுகின்ற காற்றுடனே (வாயுதேவன்); கடவுளர் பிறருமாய் - மற்ற தெய்வங்களும்தானேயாக;உலகின் வலியும் செய்கையும் - உலகத்தின் வலிமையும் அதன் காரியமும்; |