பக்கம் எண் :

 இரணியன் வதைப் படலம் 85

காவல், காட்டுதல், துடைத்தல் என்று- காத்தல், படைத்தல்,
அழித்தல் என்று கூறப்படும்; இத்தொழில் கடவ மூவரும் - இந்த
முத் தொழிலைப் புரிந்து வந்த பிரமன்,  திருமால்,   சிவன்  ஆகிய
மூவரும்; அவை   முடிக்கிலர் -   தமக்குரிய அத்தொழில்களைச்
செய்து முடிக்க மாட்டாதவராய்; முறைமை பிடிக்கிலர்- தமக்குரிய
முறையைக்  கடைப்பிடிக்காதவர்  ஆயினர்;  ஏவர்   மற்றவர் -
(மும்மூர்த்திகளின்  நிலையே   இது   வானால்)   மற்றவர்   எவர்
அவனைவெல்லவல்லார்;  யோகியர்   உறுபதம்   இழந்தார்
யோகிகள் எல்லோரும் கூட தமது பதவிகளை இழந்தனர்; தேவரும்
அவன்தாள் அலால்
- தேவர்கள் கூட, அவனுடைய பாதங்களைத்
தவிர; அர்ச்சனை செய்யார் - வேறு எவரையும் பூசிக்க மாட்டார்.
 

(9)
 

6198.

'மருக் கொள் தாமரை நான்முகன், ஐம்முகன்

முதலோர்

குருக்களோடு கற்று, ஓதுவது, அவன் பெருங்

கொற்றம்;

சுருக்கு இல் நான்மறை, "தொன்று தொட்டு

உயிர்தொறும் தோன்றாது

இருக்கும் தெய்வமும் இரணியனே! நம!" என்னும்.

 

மருக் கொள் தாமரை நான்முகன்- மணம் கமழும் தாமரை
மலரில்   அமர்ந்திருக்கும்   பிரமனும்; ஐம்முகன் முதலோர்-
ஐந்து முகங்களை உடைய சிவனும் முதலானோர்;  குருக்களோடு
- தேவ குருவான பிரகஸ்பதியுடனே;  கற்று   ஓதுவது  அவன்
பெருங்  கொற்றம்
- நாளும் படித்தறிந்து துதிப்பது அவனுடைய
வெற்றிச்   செயல்களையே;  சுருக்கு    இல்    நான்மறை
சுருங்குதலில்லாத (விரிந்த)   நான்கு   வேதங்களிலும்; 'தொன்று
தொட்டு   உயிர்   தொறும்
- மிகப் பழங்காலமுதலே எல்லா
உயிர்கள் தோறும்;  தோன்றாது   இருக்கும்   தெய்வமும் -
மறைந்து   இருக்கின்ற   தெய்வமும்  கூட;  'இரணியனே நம'
என்னும்
- இரணியனே நம என்று போற்றும்.
 

மரு - நறுமணம் தாமரை - திருமாலின் நாபியாகிய தாமரை
என்றுமாம். ஐம்முகன் - ஐந்து முகங்களை உடைய சிவபிரான்.
குருக்கள் - தேவகுரு வேதங்களிலும் மற்றுள்ள உயிர்களிடமும்
தொன்று