பக்கம் எண் :

86யுத்த காண்டம் 

தொட்டுத் தோன்றாது உறையும் தெய்வமும் இரணியனுக்கு அஞ்சி,
அவனைப் புகழ்ந்து துதிக்கும் என்பது கருத்து.
 

(10)
 

6199.

'பண்டு, வானவர் தானவர் யாவரும் பற்றி,

தெண் திரைக் கடல் கடைதர, வலியது தேடிக்

கொண்ட மத்தினைக் கொற்றத் தன் குவவுத்

தோட்கு அமைந்த

தண்டு எனக் கொளலுற்று, அது நொய்து எனத்

தவிர்ந்தான்.

 

பண்டு வானவர் தானவர் - முன்பு, தேவர்களும் அசுரர்களும்;
யாவரும்   பற்றி - ஆகிய எல்லோரும்  பிடித்து;  தெண் திரைக்
கடல் கடைதர
-  தெளிந்த   அலைகளை   உடைய   பாற்கடலை
(அமுதம்  வேண்டி)   கடைவதற்கு;வலியது  தேடிக்   கொண்ட
மத்தினை
-  வலிமை   வாய்ந்ததாகத்தேடி    கைக்கொண்டமத்தை
(மந்தரமலை);  தன்   கொற்ற  குவவுத் தோட்கு - தனது வெற்றி
மிகுந்த திரண்ட  தோளுக்கு; அமைந்த தண்டு எனக் கொளலுற்று
- அமைந்த தண்டாயுதம் எனக் கொண்டுபின்;  அது நொய்து எனத்
தவிர்ந்தான்
- அது அற்பமானது என்று விட்டு விட்டான்.
 

பண்டு - முற்காலத்தில் தானவர் -  அரக்கர்  கடல் - பாற்கடல்
மத்து - மந்தரமலை குவவுத்தோள் - திரண்டு குவிந்த தோள். தண்டு
- தண்டாயுதம் கொளல் உற்று -  கொண்டு  நொய்து - அற்பமானது
(மிகச்சிறியது).
 

(11)
 

6200.

'மண்டலம் தரு கதிரவன் வந்து போய் மறையும்

எண்தலம் தொடற்கு அரியன தட வரை இரண்டும்,

கண்தலம் பசும்பொன்னவன் முன்னவன் காதில்

குண்டலங்கள்; மற்று என், இனிப் பெரு விறல்

கூறல்?

 

மண்தலம் தருகதிரவன்- நிலவுலகத்து உயிரினங்களைத் தனது
ஒளியால் காக்கும் சூரியன்; வந்து  போய்  மறையும் -  உதித்து,
சென்று   மறைகின்ற;    எண்தலம்   தொடற்கு    அரியன
எண்ணுதற்குரிய மனத்தாலும் தீண்டுதற்கு இயலாதனவான; தடவரை
இரண்டும்
- விசாலமான  மலைகளான   உதயகிரி  அத்தமன கிரி
என்னு மிரண்டும்;  கண் தலம் பசும் பொன்னவன்   -   பசிய
பொன் போன்ற கண்களை உடைய இரணியாட்சனது; முன்னவன் -