பக்கம் எண் :

 வீடணன் அடைக்கலப் படலம் 285

தூர்த்தன, கனக மாரி; சொரிந்தன, நறு மென் 

சுண்ணம்;

போர்த்தது வானத்து, அன்று, அங்கு, எழுந்தது 

துழனிப் பொம்மல்.

 

பரவை   ஏழும்  அவனியும் ஆர்த்தன- ஏழுகடல்களும்,
மண்ணுலகமும்,     விண்ணுலகமும்      ஆரவாரம்   செய்தன;
வார்த்தொழில் புரியும் தெய்வ மங்கல   முரசும்  சங்கும்-
வாரால் கட்டப்பட்ட தெய்வீக மான மங்கல முரசுகள் முழங்கின;
சங்குகளும்  முழங்கின;   கனகமாரி   தூர்த்தன -  வானவர்
பொற்காசுகளை எங்கும் சொரிந்தனர்; நறுமென்   சுண்ணம் -
நல்ல மணமுள்ள மென்மையான வாசனைப்பொடிகள்; வானத்து
அன்று போர்த்தது 
- வானத்தையே   அன்று   மூடிவிட்டது; 
அங்குத்   துழனிப்பொம்மல்   எழுந்தது - அங்கு மிகுந்த
ஆரவாரம் எழலாயிற்று.
 

வார்த்தொழில்-வாரால்   கட்டப்பட்ட   தொழில்   முரசு 
தெய்வத்தன்மை   வாய்ந்தது.  மங்கலமானது      என்பதால்
'தெய்வமங்கல முரசு' எனப்பட்டது.   சுண்ணம் - மணப்பொடி.
துழனிப் பொம்மல் - ஆரவாரத்தின் மிகுதி. 
 

(146)
 

6511.

'மொழிந்த சொல் அமிழ்தம் அன்னாள் திறத்தினின்

முறைமை நீங்கி

இழிந்த என் மரபும் இன்றே உயர்ந்தது' என்று

ஏம்பலுற்றான்,

செழுந் தனி மலரோன்; பின்னை, 'இராவணன் 

தீமைச் செல்வம்

அழிந்தது' என்று, அறனும், தன் வாய் ஆவலம் 

கொட்டிற்று அன்றே.

  

செழும் தனி மலரோன் - செழிப்பான   சிறந்த  தாமரை
மலரில்   வீற்றிருக்கும்   பிரமதேவன்;   மொழிந்த   சொல்
அமுதமன்னான்   திறத்தினில் 
-    அமுதம்     போன்ற
மொழிகளைப்  பேசும்   சீதாபிராட்டி  காரணமாக;  முறைமை
நீங்கி
- அற  நெறியிலிருந்து நீங்கி; இழிந்த என் மரபும் -
தாழ்ந்து விட்ட எனது குலமும்; இன்றே உயர்ந்தது - இன்று
இழிவு தீர்ந்து உயர்வடைந்தது;   என்று   ஏம்பலுற்றான் -
என  மகிழ்வடைந்தான்;   பின்னை,   இராவணன் தீமைச்
செல்வம்
- பின்பு,  இராவணனுடைய   தீமையான செல்வம்;
அழிந்தது  என்று
-  இன்றோடு   அழிந்து தீர்ந்தது என்று;
அறனும்