பக்கம் எண் :

286யுத்த காண்டம் 

தன்வாய் ஆவலம் கொட்டிற்றன்றே - அறக்கடவுளும் தனது
வாயால் ஆரவாரம் செய்தது.
 

மலரோன்-பிரமன்.  'ஏம்பலுற்றான்'   என்பதற்கு   'இடரின்
தீர்ந்தான்'  என்ற   பாடமும்   பொருந்துவதே.   அறன்-அறம்
(தருமதேவதை) ஆவலம் கொட்டல்-ஆரவாரித்தல். 
 

(147)
 

வீடணனுடன் பாடிவீட்டை வலம் வர இராமன் பணித்தல்
  

6512.

இன்னது ஓர் செவ்வித்து ஆக, இராமனும், 

'இலங்கை வேந்தன்-

தன் நெடுஞ் செல்வம் தானே பெற்றமை பலரும்  

கேட்ப,

பல் நெடுந் தானை சூழ, பகலவன் சேயும் நீயும்,
மன் நெடுங் குமர! பாடிவீட்டினை வலம் செய்க!'  

என்றான்.

 

இன்னதோர் செவ்வித்தாக - இவ்வாறு நிகழும் சமயத்தில்;
இராமனும்-   இராமபிரானும்  (இலக்குவனை   நோக்கி);  மன்
நெடுங்குமர
- நிலைபெற்ற சிறந்த   அரசகுமாரனே!;   இலங்கை
வேந்தன்
- இலங்கை அரசனாகிய   வீடணன்;   தன்  நெடும்
செல்வம்
- தனக்குரிய  இலங்கையின்   அரசுச்   செல்வத்தை;
தானே   பெற்றமை - தானே பெற்றதனை; பலரும் கேட்ப -
எல்லோரும் கேட்டுத்   தெரிந்து கொள்ள; பல் நெடும் தானை
சூழ
- பெரிய சேனை   சூழ்ந்து வர; பகலவன் சேயும் நீயும்-
சூரிய குமாரனான  சுக்கிரீவனும் நீயும்;  பாடி வீட்டினை வலம்
செய்க   என்றான்
-    நமது    வானரப்படை   தங்கியுள்ள
பாடிவீட்டை வலம் வருவீராக என்றான்.
 

செவ்வி-சந்தர்ப்பம்   (சமயம்) தானையின் பெருமை புலப்பட
"பல்நெடும்தானை" என்றார்.   பாடிவீடு-பாசறை.  முடிசூடிய பின்
நகர்வலம் வருதல்  மரபு   என்பதால்   'பாடி வீட்டினை வலம் 
செய்க' என்றான். மன்-மன்னன். 
 

(148)
 

6513.

அந்தம் இல் குணத்தினானை அடியிணை-

முடியினோடும்

சந்தன விமானம் ஏற்றி, வானரத் தலைவர் தாங்க,