பக்கம் எண் :

 வீடணன் அடைக்கலப் படலம் 287

'இந்திரற்கு உரிய செல்வம் எய்தினான் இவன்' 

என்று ஏத்தி,

மந்தரத் தடந் தோள் வீரர், வலம் செய்தார், தானை

வைப்பை.

 

அந்தம்   இல்     குணத்தினானை   -   அளவில்லாத
நற்குணங்களை உடைய வீடணனை; அடியிணை முடியினோடு -
இராமபிரானுடைய   பாதுகைகளாகிய   திருமுடியுடனே; சந்தன
விமானம் ஏற்றி
- சந்தன மரத்தால் செய்த விமானத்திலே ஏறச்
செய்து; வானரத்தலைவர் தாங்க - அந்த விமானத்தை வானரப்
படைத்தலைவர்கள்   தாங்கி   வர; இந்திரற்கு உரிய செல்வம்
-  இந்திரனுடைய   செல்வத்துக்கு  நிகரான அரசுச்செல்வத்தை;
எய்தினான் இவன் என்று ஏத்தி - வீடணன் பெற்றான் என்று
போற்றி; சுந்தரத்தடந்   தோள்   வீரர் - அழகிய அகன்ற
தோள்களை   உடைய  வீரர்களான இலக்குவனும் சுக்கிரீவனும்;
தானை வைப்பை வலம் செய்தார்- வானரப்படை தங்கியுள்ள
பாடி வீட்டைச் சுற்றி வலம் செய்தனர்.
 

வீடணன்   நற்குணம்   நிறைந்தவன்   ஆதலின் "அந்தம்
இல்குணத்தினான்"   என்று    சிறப்பிக்கப்பட்டான்.   அரசப்
பதவிக்கேற்ப சிறந்த சந்தன மரத்தால் செய்யப்பட்ட விமானம்.
தானை வைப்பு-படைகள் தங்கியுள்ள  பாசறை.   இந்திரற்குரிய
செல்வம் இந்திரனது செல்வத்துக்குச் சமமானது  இலங்கையின்
ஆட்சிச் செல்வம் என்னும் பொருள் உடையது. 
 

(149)
 

பெரியோர் மகிழ்ச்சி
  

6514.

தேடுவார் தேட நின்ற சேவடி, தானும் தேடி
நாடுவான், அன்று கண்ட நான்முகன் கழீஇய நல் நீர்
ஆடுவார் பாவம் ஐந்தும் நீங்கி, மேல் அமரர் ஆவார்;
சூடுவார் எய்தும் தன்மை சொல்லுவார் யாவர்? 

சொல்லீர்.

 

தேடுவார்   தேட    நின்ற   சேவடி  -   ஞானிகளும்
அடியார்களும் தேடியும் காணாத பரமனது திருவடிகளை; தானும்
தேடி நாடுவான்
-   தானும்   தேடி அடைய விரும்பியவனாய்;
அன்று  கண்ட  நான்முகன்
-   திருவிக்கிரமனாக   வளர்ந்த
திருமாலின் திருவடிகள் அப்போது   கண்ட   பிரமன்;  கழிஇய
நன்னீர் ஆடுவார்
- அத்திருவடிகளைத்   திருமஞ்சனம்  செய்த
நல்ல நீரிலே