பக்கம் எண் :

290யுத்த காண்டம் 

என்று   எண்ணி -  சூரியன் தனது கதிர்கள் வெப்பம் மிக்கன
என  நினைத்து;   தீர்ந்தனன் - தனது கிரணங்களைச் சுருங்கச் 
செய்தான் மறைந்தான்.
 

தந்தனன் - தந்து   முற்றெச்சம்.   இலங்கை   வேந்தனான
வீடணனை  வெப்பமான  கதிர்கள் வருத்தும் என்பதால் சூரியன்
'தன் கதிர் சிந்தின  வெய்ய"   என்று   நினைத்து   கதிர்களைச் 
சுருக்கிக்   கொண்டு   மறைந்தான்   என்பது   கருத்து.   இது 
தற்குறிப்பேற்றவணி. 
 

(1)
 

அந்தி மாலையின் தோற்றம்
 

6517.

சந்தி வந்தனைத் தொழில் முடித்து தன் நெடும்
புந்தி நொந்து, இராமனும் உயிர்ப்ப, பூங் கணை
சிந்தி வந்து இறுத்தனன், மதனன்; தீ நிறத்து 
அந்தி வந்து இறுத்தது; கறுத்தது அண்டமே.
 

சந்தி   வந்தனைத்    தொழில்   முடித்து -  (சூரியன்
மறைந்ததும்    மாலை     நேரம்   என்பதால்  இராமபிரான்)
சந்தியாவந்தனம்  செய்து முடித்து);  தன் நெடும் புந்தி நொந்து
- தனது நெடிய   மனம்   நொந்து;   இராமனும்   உயிர்ப்ப -
இராமபிரானும்  (சீதையைப்   பிரிந்த   துயரால்) பெருமூச்சு விட;
மதனன்   பூங்கணை  சிந்திவந்து
- மன்மதனும் மலரம்புகளை
எய்து கொண்டு  வந்து;   இறுத்தனன் - அங்கு தங்கலாயினான்;
தீநிறத்து அந்திவந்து இறுத்தது
- நெருப்புப் போன்ற நிறத்தை
உடைய  அந்தி மாலை வந்தடைந்தது;  அண்டம்  கறுத்தது -
(அதனால்) வானம் இருண்டு கறுத்தது.
 

சந்தி   வந்தனை - சந்தியா காலத்தில்   செய்யும்  வழிபாடு
(சந்தியாவந்தனம்) நெடுமை - இங்குப் பெருமை. புந்தி -   மனம்.
மதனன் - மன்மதன். 
 

(2)
 

6518.

மாத் தடந் திசைதொறும் மறைந்த வல் இருள்
கோத்தது, கருங் கடல் கொள்ளை கொண்டென;
நீத்த நீர்ப் பொய்கையில் நிறைந்த நாள்மலர்
பூத்தென, மீன் குலம் பொலிந்தது, அண்டமே.
 

மாத்தடந்திசை   தொறும் -   (பகல் முழுதும் பரிதிக்குப்
பயந்து) பெரியபரந்த திசைகள் தோறும்  சென்று;  மறைந்த வல்
இருள்
-   மறைந்திருந்த   வலிய   இருளானது;   கருங்கடல்
கொள்ளை  கொண்டென
-   கரிய கடல்   நீர்  உலகத்தைக்
கொண்டது போல;