பக்கம் எண் :

 இலங்கை கேள்விப் படலம் 291

கோத்தது   -   வந்து   கவிந்து   கொண்டது;  நீத்த  நீர்ப்
பொய்கையில்
- நிறைந்த நீரையுடைய பொய்கையிலே;  நிறைந்த
நாண்மலர்பூத்தென
-  நிறைந்த அன்றலர்ந்தமலர்கள்   பூத்தது
போல;  அண்டம் மீன்  குலம்   பொலிந்தது - வானத்திலே
விண்மீன்கள் விளங்கின.
 

நீத்தம் - வெள்ளம் நிறைந்த நீர் என்பது பொருள். 
 

(3)
 

6519.

சில் இயல் கோதையை நினைந்து தேம்பிய
வில்லியைத் திரு மனம் வெதுப்பும் வெம்மையால், 
எல்லியைக் காண்டலும் மலர்ந்த ஈட்டினால்.
மல்லிகைக் கானமும், வானமும் ஒத்ததே.
 

சில்  இயல்  கோதையை   நினைந்து - சில வகைகளாக
அழகு  படுத்தும்   கூந்தலையுடைய சீதா பிராட்டியை நினைத்து;
தேம்பிய  வில்லியை - வருந்துகின்ற வில்வீரனான இராமனை;
திருமனம்   வெதுப்பும் வெம்மையால் - அவனது  அழகிய
மனத்தை     வெதுப்புகின்ற      வெப்பத்தால்;   எல்லியைக்
காண்டலும்
-  இரவைக் கண்டவுடனே; மலர்ந்த ஈட்டினால்-
மலர்ந்திருக்கும் தன்மையால்; மல்லிகைக் கானமும் வானமும்
ஒத்தது 
-  மல்லிகைக்   காடும்   விண்மீன்கள்   பொலியும்
வானத்தை ஒத்தது.
 

சில் இயல் கோதை - சீதை. முடி, கொண்டை, சுருள், குழல்,
பனிச்சை  என்று ஐந்து வகையாக அலங்கரித்தலால் "சில் இயல்
கோதை"   என்றார்.   கோதை  -   மலர் மாலை உவமையாகு
பெயராகச்   சீதையை   உணர்த்தியது.   வில்லி  -   இராமன்
(வில் வீரன்   என்பது  பொருள்), எல்லி, இரவு. ஈடு - தன்மை.
செம்மையான நினைக்கும் மனமாதலின் "திருமனம்" என்றார். 
 

(4)
 

6520.

ஒன்றும் உட் கறுப்பினோடு, ஒளியின் வாள் உரீஇ,
'தன் தனி முகத்தினால் என்னைத் தாழ்த்து அற
வென்றவள் துணைவனை இன்று வெல்குவேன்'
என்றது போல, வந்து எழுந்தது-இந்துவே.
 

ஒன்றும்   உட் கறுப்பினோடும் - பொருந்திய உள்ளத்தே
பகைமையோடும்; ஒளியின் வாள்   உரீஇ - ஒளியாகிய வாளை
உருவிக் கொண்டு; தன்தனி முகத்தினால் -   தனது   ஒப்பற்ற
முகத்தினாலே; என்னைத்   தாழ்த்து -   என்னைத்   தாழ்ந்து 
போகச்   செய்து;     அறவென்றவள் - அடியோடு   வெற்றி 
பெற்றவளாகிய   சீதாபிராட்டியின்;     துணைவனை   இன்று
வெல்குவேன்
-