பக்கம் எண் :

292யுத்த காண்டம் 

துணைவனான இராமபிரானை இன்று நான் வெல்லுவேன்; என்றது
போல 
-  என்று   கூறுவதுபோல;   இந்து வந்து எழுந்தது-
வானத்திலே சந்திரன் வந்து எழுந்தான்.
 

கறுப்பு -   களங்கம் (பகைமை) உரீஇ- உருவி  (சொல்லிசை
அளபெடை). ஒளியின்  வாள் - உருவகம்.   சீதையை   வெல்ல
வல்லமையற்ற சந்திரன்,   அவள்  கணவனை இன்று வெல்வேன்
என்றெழுந்தான் என்பது தற்குறிப்பேற்றம். 
  

(5)
 

6521.

'கண்ணினை அப்புறம் கரந்து போகினும்,
பெண் நிறம் உண்டுஎனின், பிடிப்பல் ஈண்டு' எனா,
உள் நிறை நெடுங் கடல் உலகம் எங்கணும்
வெண் நிற நிலவு எனும் வலையை வீசினான்.
 

கண்ணினை   அப்புறம்-   கண்ணுக்குப்  புலனாகாதபடி
அப்புறத்தில்; கரந்துபோகினும்- மறைந்து சென்றாலும்;  பெண்
நிறம் உண்டெனில்
-   சீதை   என்னும்  பெண்ணின் உடல்
இருக்குமானால்; பிடிப்பல்   ஈண்டு   எனா -   இப்போதே
பிடிப்பேன் என்று; உள் நிறை நெடுங்கடல்- உள்ளே நிறைந்த
நீரையுடைய கடல் சூழ்ந்த;   உலகம் எங்கணும்- இவ்வுலகம்
எங்கும்; வெண் நிற நிலவு   எனும் -   வெண்மை நிறமான
நிலவொளி என்னும்; வலையை   வீசினான்  -   வலையைச்
சந்திரன் வீசினான்.
 

கண்ணினை - கண்ணுக்கு; வேற்றுமை    மயக்கம். நிலவை
வலையாக   உருவகம்   செய்தார். 'இந்து'வலை வீசினான் என
இயையும்.
 

(6)
 

6522.

புடைக்கை வன் திரை எடுத்து ஆர்க்கும் போர்க்

கடல்,

'உடைக் கருந் தனி நிறம் ஒளித்துக் கொண்டவன்,
அடைக்க வந்தான் எனை, அரியின் தானையால்;
கிடைக்க வந்தான்' எனக் கிளர்ந்தது ஒத்ததே.
 

புடைக்கை   வன்திரை   எடுத்து  -    பக்கங்களிலுள்ள
கைகளாகிய  வலிய அலைகளை வீசி; ஆர்க்கும் போர்க் கடல்
- ஆரவாரம் செய்து போர்புரிய வரும் கடலானது; உடைக் கரும்
தனிநிறம்
-   என்னுடைய   கருமையான   ஒப்பற்ற நிறத்தினை;
ஒளித்துக்   கொண்டவன்
-    தான்     கவர்ந்து  வைத்துக்
கொண்டவனாகிய     இராமன்;   அரியின்   தானையால் -
வானரங்களின் படையைத்