பக்கம் எண் :

 இலங்கை கேள்விப் படலம் 293

துணைகளாகக் கொண்டு; எனை அடைக்க வந்தான்- என்னைத்
தடுத்து   அணைகட்ட   வந்தான்;  கிடைக்க வந்தான்- எனது
கைக்கு   அகப்படும்படி   இப்போது   வந்துவிட்டான்;  எனக்
கிளர்ந்தது ஒத்தது
- என்று பொங்கி எழுந்தது போல் இருந்தது.
 

அரியின்தானை - வானரப் படை.   அடைக்க   -   தடுத்து
அணைகட்ட.   அலைகளை  வீசிக் கொண்டு, கரையோடு மோத
வந்த கடலை,   கைகளை   வீசி இராமனுடன் போரிட வந்ததை
ஒத்திருந்தது   என்பதால்   "போர்க்கடல்'   என்றார். கிடைக்க
வந்தான் என   மகிழ்ந்து   கிளர்ந்தெழுந்தது  என்பது கருத்து.
தற்குறிப்பேற்றம். 
 

(7)
 

6523.

மேல் உகத் தொகுதியால் முதிர்ந்த மெய் எலாம்
தோல் உகுத்தாலென, அரவத் தொல் கடல்
வாலுகத்தால் இடைப் பரந்த வைப்பு எலாம்
பால் உகுத்தாலென, நிலவு பாய்ந்ததால்.
 

மேல் உகத் தொகுதியால்- கடந்துபோன பல யுகங்களால்;
முதிர்ந்த மெய் எலாம் - முதுமையடைந்த தன் உடலெல்லாம்;
தோல் உகுத்தால் என - தோலை உரித்தது   போல; அரவத்
தொல்கடல்
- பெரிய ஒலியையுடைய பழைமை  வாய்ந்த  கடல்;
வாலுகத்தால் இடை பரந்த  வைப்   பெலாம் -   மணல்
குன்றுகளால்  இடையே பரந்த இடமெல்லாம்; பால் உகுத்தால்
என
- பாலைச்  சொரிந்தது  போல்; நிலவு பாய்ந்தது- நிலவு
பாய்ந்து பரவியது.
 

முதிர்ந்த - முதிர்ச்சியுற்ற. அரவம் -   ஓசை.   தொல்கடல்
- பழமையான கடல். வாலுகம் - மணற்குன்று.  வைப்பு - இடம்.
உகுத்தல் - சொரிதல். உகத்தொகுதி - பலயுகங்களின்  தொகுதி.
விசும்பு   தோல்   உரித்தற்கு   காரணம்    கூறுவார்   'உகத் 
தொகுதியால் முதிர்ந்த   மெய்"   என்றார்.   மேலே   இருந்து
நிலவுதரையில்   பாய்ந்தமைக்கு   விசும்பு   தோலுரித்ததையும்
கரையெங்கும் நிலவொளி பரவியிருப்பதற்கு  கடல் வாலுகத்தால்
பாலைப் பொழிந்திருப்பதையும் உருவகம்
செய்தார். 
 

(8)
 

6524.

மன்றல்வாய் மல்லிகை எயிற்றின், வண்டுஇனம்
கன்றிய நிறத்தது, நறவின் கண்ணது,
குன்றின்வாய் முழையின்நின்று உலாய கொட்பது,
தென்றல் என்று ஒரு புலி உயிர்த்துச் சென்றதால்.
 

மன்றல்வாய்     மல்லிகை     எயிற்றின் -   மணம்
பொருந்திய  மல்லிகை அரும்புகளாகிய பற்களையும்; வண்டினம்
கன்றிய