நிறுத்தது- வண்டினமாகிய கரிய கோடுகளை உடைய உடலையும்; நறவின் கண்ணது- தேனாகிய சிவந்த கண்களையும்; குன்றின் வாய் முழையின் நின்று - மலையிடத்தே உள்ள குகையிலிருந்து; உலாய கொட்பது - உலாவும் தன்மையுடையதுமாகிய; தென்றல் என்று ஒரு புலி - தென்றல் என்னும் ஒரு புலியானது; உயிர்த்துச் சென்றது- பெருமூச்சுவிட்டபடி வந்தது. |
தென்றல் - புலி; மல்லிகை பல்; வண்டுகள் - புலியின் கருங்கோடுகள் - இது முற்றுருவகம். தென்றலின் வருகையைப் புலியின் வருகைக்கு உருவகித்துக் கூறியநயம் அறிந்து மகிழ்தற்குரியது. கன்றிய - கறுத்த. நறவு - தேன். முழை - குகை. கொட்பு - உழல்தல், திரிதல். |
(9) |
6525. | கரத்தொடும் பாழி மாக் கடல் கடைந்துளான் |
| உரத்தொடும், கரனொடும், உருவ ஓங்கிய |
| மரத்தொடும் தொளைத்தவன் மார்பில், மன்மதன் |
| சரத்தொடும் பாய்ந்தது, நிலவின் தாரை வாள். |
|
கரத்தொடும்பாழிமாக்கடல் கடைந்துளான் - தனது கைகளினாலே வன்மைமிக்க பெரிய பாற்கடலைக் கடைந்த வாலியினது; உரத்தொடும் கரனொடும்- மார்பையும், கரனையும்; உருவ ஓங்கிய மரத்தொடும் - உயர்ந்து வளர்ந்த வடிவத்தை உடைய ஏழுமரங்களையும்; தொளைத்தவன்- ஊடுருவிச் செல்லுமாறு அம்புதைய்த்த இராமபிரானுடைய; மார்பில் - மார்பிலே (இன்று); மன்மதன் சரத்தொடும்- மன்மதனுடைய அம்புகளோடு; நிலவின்தாரை வாள் பாய்ந்தது- நிலவின் கதிர்களாகிய வாளும் பாய்ந்தது. |
சீதையைப் பிரிந்து பிரிவாற்றாமையால் வருந்திய, இராமபிரானை மன்மதனும் மலரம்புகளால் துன்புறச் செய்தான். பிரிந்தார்க்குப் பகையான நிலவும் துன்புறுத்தியது என்பது கருத்து. |
(10) |
இராமன் பிரிவுத் துயரால் வருந்துதல் |
6526. | உடலினை நோக்கும்; இன் உயிரை நோக்குமால்; |
| இடரினை நோக்கும்; மற்று யாதும் நோக்கலன்; |
| கடலினை நோக்கும்; அக் கள்வன் வைகுறும் |
| திடரினை நோக்கும்; தன் சிலையை நோக்குமால். |