பக்கம் எண் :

330யுத்த காண்டம் 

கலங்களோடும், அச் சாத்திய துகிலொடும், கதிர்

வாள்

இலங்கை வேந்தனும், ஏழு நாள் விசும்பிடை

இருந்தான்!

  

அலங்கல் மாலையும் சாந்தமும்- அணிந்த  மாலையும்;
பூசிய சந்தனமும்; அச் சாத்தியதுகிலொடும் - அணிந்திருந்த
அந்த ஆடையோடும்; கதிர்வாள்  இலங்கை வேந்தனும் -
ஒளிரும் வாளை உடைய இலங்கை வேந்தனான இராவணனும்;
ஏழுநாள் விசும்பிடை இருந்தான்- ஏழுநாட்கள் வானிலேயே
தங்கியிருந்தான் என்றால்; விலங்கல் வெந்தவா- இலங்கைக்கு
ஆதாரமாயிருந்த   திரிகூடமலை   அனுமன்  வைத்த  தீயால்
வெந்ததை; வேறுஇனி விளம்புவது எவனோ- இனித்தனியாக
விளம்பவும் கூடுமோ?.
  

சிவபிரான்  தந்தவாள்   இருந்தும்  இலங்கையைத்  தீக்கு
இரையாக்கிய   அனுமனை   இராவணனால்  எதுவும்  செய்ய
முடியவில்லை   என்பதை  'கதிர்வாள்   இலங்கை   வேந்தன்'
என்பதுணர்த்தும். கலம் - அணிகலம்.
  

(66)
 

6582.

'நொதுமல் திண் திறல் அரக்கனது இலங்கையை

நுவன்றேன்;

அது மற்று அவ்வழி அரணமும் பெருமையும் 

அறைந்தேன்:

இது மற்று அவ்வழி எய்தியது; இராவணன் ஏவ,
பதுமத்து அண்ணலே பண்டுபோல் அந் நகர்  

படைத்தான்.

 

நொதுமல்  திண்  திறல் அரக்கனது- வலிய, திண்ணிய,
ஆற்றலை  உடைய அரக்கனான  இராவணனது;  இலங்கையை
நுவன்றேன் 
-  இலங்கையின்  வரலாறு  பற்றிக்   கூறினேன்;
அதுமற்றவ்வழி  அரணமும் -  அதுவல்லாது இலங்கையின்
மதிலைப் பற்றியும்; பெருமையும் அறைந்தேன்- இராவணனது
பெருமையும் சொன்னேன்; இது மற்றவ் வழி எய்தியது- இந்த
அனுமனது செய்தி  அங்குநடந்தது  (அதனையும் சொன்னேன்);
இராவணன் ஏவ -  இராவணன்  கட்டளை  இட; பதுமத்து
அண்ணலே 
-  தாமரை  மலரில்   வசிக்கும்  பிரமதேவனே;
பண்டுபோல்   அந்நகர்   படைத்தான்-  முன்பு போலத்
திகழும்படி அந்த நகரத்தைப் படைத்தான்.