நொதுமல் - வலிமை. இராவணது வலிமையும், திறமையும் தோன்ற 'நொதுமல் திண்திறல் அரக்கன்' என்றான். இலங்கையின் தோற்றம், அமைப்பு போன்றவற்றைக் கூறினேன் என்பதை 'இலங்கையை நுவன்றேன்' என்றான் 'இது' என்பது இந்த அனுமன் செயல். பதுமத்து அண்ணல் - தாமரையில் வீற்றிருக்கும் தலைவன் (பிரமன்) |
(67) |
வீடணன் தான் போந்த காரணம் கூறுதல் |
6583. | 'காந்தும் வாளியின் கரன் முதல் வீரரும், கவியின் |
| வேந்தும், என்று இவர் விளிந்தவா கேட்டு அன்று; |
| அவ் இலங்கை |
| தீந்தவா கண்டும், அரக்கரைச் செருவிடை முருக்கிப் |
| போந்தவா கண்டும், நான் இங்குப் புகுந்தது- |
| புகழோய்!' |
|
புகழோய் - புகழ்மிக்கவனே; நான் இங்குப் புகுந்தது - நான் உன்னைச் சரண்புகுந்து இங்கு வந்தது; காந்தும் வாளியின்- உனது எரிக்கும் அம்புகளால்; கரன்முதல் வீரரும் - கரனும் அவனுக்குத் துணையாக வந்த வீரர்களும்; கவியின் வேந்தும்- வானர சேனையின் அரசனான வாலியும்; என்றிவர் விளிந்தவா கேட்டன்று - ஆகிய இவர்களெல்லாம் மடிந்ததைக் கேட்டதனால் அல்ல; அவ்விலங்கை தீந்தவா கண்டும்- அந்த இலங்கை உன்னருள் பெற்ற அனுமன் ஒருவனாலே அழிந்தது கண்டும்; அரக்கரைச் செருவிடை முருக்கிப் போந்தவா கண்டும்- இலங்கை அரக்கர்களை எல்லாம் போரிலே அனுமன் அழித்துத் திரும்பி வந்ததை நேரில் கண்டதாலுமேயாம். |
இராமபிரான் தனது பண்பாலும் செயலாலும் புகழுக்கு உரியவனாகத் திகழ்வதால் 'புகழோய்' என வீடணன் அழைத்தான். காந்துதல் - எரித்தல் ஒளிர்தலுமாம். |
(68) |
இராமன் அனுமனைப் புகழ்ந்துரைத்தல் |
6584. | கேள் கொள் மேலையான் கிளத்திய பொருள் எலாம் |
| கேட்டான், |
| வாள் கொள் நோக்கியை, பாக்கியம் பழுத்தன்ன |
| மயிலை, |