பக்கம் எண் :

332யுத்த காண்டம் 

நாள்கள் சாலவும் நீங்கலின், நலம் கெட மெலிந்த
தோள்கள் வீங்கி, தன் தூதனைப் பார்த்து, இவை

சொன்னான்:

  

கேள் கொள் மேலையான் - தன்னுடன்  நட்புக்கொண்ட
வீடணன்; கிளத்திய  பொருள் எலாம்  கேட்டான் - கூறிய
பொருள்களை  எல்லாம்  கேட்ட  இராமபிரான்; வாள் கொள்
நோக்கியை
-  வாள்  போன்ற   கண்களை  உடையவளும்;
பாக்கியம் பழுத்தன்ன மயிலை- புண்ணியம் பழுத்துப் பயன்
தந்தது போன்ற மயிலைப் போன்றவரும் ஆகிய சீதாபிராட்டியை;
நாள்கள் சாலவும் நீங்கலின்-  பல நாட்கள் பிரிந்தமையால்;
நலம்  கெட மெலிந்த  தோள்கள்  வீங்கி - அழகு கெட
மெலிந்து  போன தோள்கள்  வீங்கி; தன் தூதனைப் பார்த்து
இவை சொன்னான்
- தன்  தூதனான அனுமானைப் பார்த்துப்
பின்வருமாறு கூறலானான்.
  

கேள்- நட்பு. மேலையான்- வீடணன்; மேன்மையுடையவன்
(மேலோன்);  பொருள்  -   கருத்து.  புண்ணியத்தின்  பயனை
'புண்ணியம்  பழுத்தன்ன'  என்றான்.  தோள்கள்  பிராட்டியின்
பிரிவினால்  அழகு  கெட்டு மெலிந்திருந்தன வாதலின்  'நலம்
கெடமெலிந்த தோள்கள்" என்றார். அனுமன்  செயல் கேட்டுப்
பூரித்த தோள்களை'  வீங்கி  என்றார்   வீங்குதல் - பருத்துப்
பூரித்தல். 
 

(69)
 

6585.

'கூட்டினார் படை பாகத்தின் மேற்படக் கொன்றாய்;
ஊட்டினாய், எரி ஊர் முற்றும்; இனி, அங்கு ஒன்று 

உண்டோ?

கேட்ட ஆற்றினால், கிளிமொழிச் சீதையைக் 

கிடைத்தும்

மீட்டிலாதது, என் வில் தொழில் காட்டவோ?-வீர!
 

வீர-  வீரம்  மிக்கவனே!; கூட்டினார் படை பாகத்தின்
மேற்படக்    கொன்றாய் -   இலங்கையில்    இராவணன்
கூட்டிவைத்திருந்த படையில்  பாதிக்கு  மேல் நீயே  கொன்று
தீர்த்தாய்; எரி ஊர் முழுதும்  ஊட்டினாய் - இலங்கை நகர்
முழுவதும் தீமூட்டி  அழியச் செய்தாய்; இனி, அங்கு ஒன்று
உண்டோ
- இனி அங்கு நான் செய்ய வேண்டியது ஏதேனும்
ஒன்று உள்ளதோ?; கேட்ட  ஆற்றினால் - வீடணன்  கூறக்
கேட்ட செய்திகளால்; கிளிமொழிச் சீதையை- கிளி போன்ற
மொழிகளை உடைய சீதா தேவியை;