குலமுதல்தலைவர். சகரர். சகரர்கள் தோண்டியதால் 'சாகரம்' எனப் பெயர் பெற்றது என்பர். கடல் தெய்வத்தைப் பிரார்த்திப்பதற்குத் தனியே இருந்து வேண்டவேண்டுமாதலின் 'வேறு இரந்து வேண்டுதி' என்றான். |
(2) |
இராமன் கடற்கரையை அடைதல் |
6591. | 'நன்று, இலங்கையர் நாயகன் மொழி' என |
| நயந்தான், |
| ஒன்று தன் பெருந் துணைவரும் புடை செல, |
| உரவோன், |
| சென்று வேலையைச் சேர்தலும், விசும்பிடை, சிவந்த |
| குன்றின் மேல்நின்று குதித்தன, பகலவன் குதிரை. |
|
நன்று இலங்கையர் நாயகன் மொழி - இலங்கையர் வேந்தனான வீடணன் கூறிய மொழி நல்லதே; என நயந்தான்- என்று விரும்பி உடன்பட்ட இராமபிரான்; ஒன்றுதன் பெரும் துணைவரும்- நெருங்கியதனது சிறந்த துணைவர்களும்; புடைசெல - இருபக்கமும் நெருங்கிவர; உரவோன் சென்று வேலையைச் சேர்தலும்- வலிமை மிக்கவனாகிய இராமபிரான் கடற்கரையை அடைதலும்; சிவந்த குன்றின் மேல்நின்று - சிவந்த நிறம் வாய்ந்த உதயகிரியின் மேலிருந்து; பகலவன் குதிரை - சூரியனுடைய தேரிலே பூட்டப்பட்ட குதிரைகள்; விசும்பிடைக் குதித்தன - வானத்திலே குதித்துச் செல்வனவாயின. |
'உரவோன்; அறிவுத்திண்மையுடையவன் - என இராமனைக் குறிப்பிட்டார். சூரியோதயத்தாலே கீழ்த்திசையிலுள்ள உதயகிரி சிவந்திருந்ததாதலின் 'சிவந்த குன்றின் மேல்' என்றார். |
(3) |
இராமன் புல்லில் அமர்ந்து, வருண மந்திரத்தைத் தியானித்தல் |
6592. | கொழுங் கதிர்ப் பகைக் கோள் இருள் நீங்கிய |
| கொள்கை, |
| செழுஞ் சுடர்ப் பனிக் கலை எலாம் நிரம்பிய திங்கள் |
| புழுங்கு வெஞ் சினத்து அஞ்சனப் பொறி வரி |
| அரவம் |
| விழுங்கி நீங்கியது ஒத்தது, வேலை சூழ் ஞாலம். |