வேலை சூழ் ஞாலம்- கடல் சூழ்ந்த இந்த உலகமானது; கொழுங்கதிர்ப்பகை - செழுமைமிக்க சூரியனுடைய கிரணங்களுக்குப் பகையாகிய; கோளிருள் நீங்கிய கொள்கை- (இரவெல்லாம்) நிறைந்திருந்த இருள்நீங்கிய தன்மை; செழுஞ்சுடர் பனிக் கலைஎலாம்- செழுமையான ஒளியை உடைய குளிர்ந்த எல்லாக்கலைகளும்; நிரம்பியதிங்கள் - நிறைந்திருக்கும் சந்திரனை; புழுங்கு வெஞ்சினத்து - மனம் புழுங்கிக் கொடியசினத்தைஉடைய; அஞ்சனப் பொறி வரி அரவம் - அஞ்சனம் போன்ற புள்ளிகளையும் வரிகளையும் கொண்ட பாம்பாகியராகு; விழுங்கி நீங்கிய தொத்தது - விழுங்கி உமிழ்ந்ததை ஒத்துக்காணப்பட்டது. |
அஞ்சனப்பொறி - உவமைத் தொகை. கலை- சந்திரனுடைய ஒளிக்கற்றை. கொள்கை - தன்மை. |
(4) |
6593. | 'தருண மங்கையை மீட்பது ஓர் நெறி தருக !' |
| என்னும் |
| பொருள் நயந்து, நல் நூல் நெறி அடுக்கிய புல்லில், |
| கருணைஅம் கடல் கிடந்தனன், கருங் கடல் நோக்கி; |
| வருண மந்திரம் எண்ணினன், விதி முறை வணங்கி. |
|
தருண மங்கையை மீட்பதோர்-இளமைப் பருவத்தினளான சீதையை இராவணனுடைய சிறையிலிருந்து மீட்டுக் கொண்டு வருதற்குரிய ஒரு; நெறி தருக என்னும் பொருள் நயந்து- வழியைத் தருவாயாக என்னும் பொருளை விரும்பி; நல்நூல் நெறி அடுக்கிய புல்லில்- நல்ல நூலாகிய வேதத்தின் கூறிய நெறிப்படி அடுக்கப்பட்ட தருப்பைப் புல்லில்; கருங்கடல் நோக்கி - கருமை நிறமான கடலைப் பார்த்தபடி; கருணையங்கடல் கிடந்தனன் - கருணைக் கடலான இராமபிரான் படுத்தபடி இருந்தவன்; விதிமுறை வணங்கி- வருணனைத் தொழவேண்டியமுறைப்படி தொழுது; - வருண மந்திரம் எண்ணினான் - வருண மந்திரத்தைத் தியானித்தவனாக இருந்தான். |
மாறாத இளமையுடைய சீதாபிராட்டியை 'தருண மங்கை' என்றார். தருணம் - இளமை. வேதமந்திரங்களைக் கூறி அதன்படி அடுக்கப்பட்ட தருப்பைப்புல் ஆதலின் 'நல்நூல் நெறி அடுக்கியபுல்' என்றார். நல்நூல் - வேதம். வருணனை வணங்கவேண்டிய விதிமுறைப்படி வணங்கியதை 'விதிமுறை வணங்கி' என்றார். கருங்கடல் - பண்புத்தொகை. எண்ணுதல் - இடைவிடாது நினைத்தல் (தியானித்தல்) |