'கருங்கடல் நோக்கிக் கருணையங்கடல் கிடந்தான்' என்ற சொல்லமைப்பின் நயம் தேர்க. |
(5) |
ஏழுநாள் சென்றும் வருணன் வாராமையால் இராமன் சினத்தல் |
6594. | பூழி சென்று தன் திரு உருப் பொருந்தவும், பொறை |
| தீர் |
| வாழி வெங் கதிர் மணி முகம் வருடவும், |
| வளர்ந்தான்; |
| ஊழி சென்றன ஒப்பன, ஒரு பகல்; அவை ஓர் |
| ஏழு சென்றன; வந்திலன், எறி கடற்கு இறைவன். |
|
பூழி சென்று தன் திருவுருப் பொருந்தவும்- கடற்கரைப் புழுதியெல்லாம் இராமபிரானுடைய திருமேனியில் பொருந்தவும்; பொறை தீர் வாழி வெங்கதிர் மணிமுகம் வருடவும்- குற்றம் நீங்கிய வெம்மை வாய்ந்த சூரியனுடைய கிரணங்கள் அழகிய முகத்தைத் தடவவும்; வளர்ந்தான் - இராமபிரான் தருப்பையின் மீது கண்களை மூடியவனாகப் படுத்திருந்தான்; ஒரு பகல் ஊழி சென்றன ஒப்பன- ஒருநாள் கழிவது பல ஊழிகள் செல்வன போன்றிருந்தது சென்றும்; அவை ஓர் ஏழு சென்றன- அத்தகை நாட்கள் ஏழு சென்றன; எறிகடற்கு இறைவன் வந்திலன் - அலையெறியும் கடல் அரசனான வருணன் வந்தானல்லன். |
வருடுதல்- தடவுதல். ஒரு பகல் கழிவது ஒரு ஊழிக்காலம் கழிவது போலிருந்தது "ஒரு பகல் பற்பல ஊழிகளாய் விடும்' என்ற திருவிருத்தம் நினைவு கூறத்தக்கது. இப்படிப்பட்ட ஏழு நாள்கள் சென்றும் வருணன் வந்திலன். |
(6) |
6595. | 'ஊற்றம் மீக் கொண்ட வேலையான், "உண்டு", |
| "இலை", என்னும் |
| மாற்றம் ஈக்கவும் பெற்றிலம், யாம்' எனும் மனத்தால், |
| ஏற்றம் மீக்கொண்ட புனலிடை எரி முளைத்தென்னச் |
| சீற்றம் மீக்கொண்டு சிவந்தன, தாமரைச் செங் கண். |
|
ஊற்றம் மீக் கொண்ட வேலையான் - செருக்கு மேலோங்கப் பெற்ற இந்தக் கடல் வேந்தன்; உண்டு, இலை என்னும் மாற்றம் ஈக்கவும் பெற்றிலம் யாம்-உண்டு, இல்லை என்று சொல்லக் கேட்கவும் பெற்றோமில்லையாம்; எனும் மனத்தால் - என்ற எண்ணத்தால்; ஏற்றம் மீக் கொண்ட புனலிடை- பெருகிப் பொங்கி |